தேவதையை கண்டேன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான் ஆனால்.. ரகசியம் உடைக்கும் அழகி பட நடிகன்.?

நடிகர் பார்த்திபன் தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் கூட இவர் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் நடித்த இவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. மேலும் கடந்த 2002 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அழகி இந்த படத்தில் பார்த்திபன் நந்திதா தாஸ்,தேவயானி போன்ற பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள் மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தத் திரைப்படத்தின் கதை ஆரம்ப காலகட்டத்தில் சிறுவயதில் இருவர்களும் காதலித்து பின்பு சூழ்நிலை காரணமாக பிரிந்து விடுவது போல் தெரியும் ஆனால் நடிகர் பார்த்திபன் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அட்டகாசமாக நடித்திருப்பார். மேலும் இவர் படித்து மிகப்பெரிய ஆளாக இருப்பார் ஆனால் நடிகை நந்திதா தாஸ் இந்த திரைப்படத்தில் ஒரு குடிமகனை திருமணம் செய்து கொண்டு மிகவும் ஏழ்மையாக கஷ்டப்படுவார்.

இதனை எதர்ச்சியாக சண்முகம் பார்க்கும் பொழுது மிகவும் மன வருத்தத்துடன் கவலைப்படுவார். பின்பு தனது வீட்டிற்கு வேலைக்கார பெண்மணியாக அழைத்து வருவார். இப்படி இருக்கும் நிலைமையில் தான் இந்த திரைப்படத்தில் பல திருப்பங்கள் இருந்திருக்கும். மேலும் இதில் சிறு வயது பார்த்திபனாக நடித்த நடிகர் தான் சதீஷ்.

இவர் இந்த ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்துவிட்டு தற்பொழுது பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறாராம். இவர் ஆள் அடையாளமே தெரியாமல் தற்பொழுது இருந்தாலும் இவரை பார்த்த பலரும் அழகி படத்தில் நடித்த சதீஷா இவர் அடையாளமே தெரியாமல் இருக்கிறார் என்றும் கூறிவரும் நிலையில் அழகி படத்திற்குப் பின்பு இவரை தேடி எந்த ஒரு படமும் வரவில்லையாம்.

sathish
sathish

அதேபோல் நடிகர் பரத் நடித்த காதல் திரைப்படமும்,தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் ஆகிய திரைப்படங்களில் இவர் தான் நடிக்க வேண்டுமாம் ஆனால் ஆடிஷன் வரை சென்று என்ன காரணங்கள் என்பது தெரியவில்லையாம் இவரை விலக்கி விட்டார்களாம். இதனை தொடர்ந்து தற்பொழுது இவர் தனது நண்பர்களுடன் ஒரு சில பிசினஸ்களை கவனித்துக் கொண்டு வருகிறாராம்.

Leave a Comment