நான்கு நாட்களில் வசூல் வேட்டையில் அடித்து நொறுக்கிய பொன்னியின் செல்வன் 2.? இதோ பட குழுவே வெளியிட்ட அறிவிப்பு.!

இயக்குநர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம். முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை போலவே தற்பொழுது இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், நல்ல விமர்சனமும் கிடைத்து வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த பல பிரபலங்களும் ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்கள் என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தான்.இந்த பொன்னியின் செல்வன் கதையை தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் பலரும் எடுக்க முயற்சித்து கைவிட்டு விட்டார்கள்.

ஆனால் இயக்குநர் மணிரத்னம் அவர்கள் எப்படியோ ஒரு வழியாக இந்த இரண்டு பாகங்களையும் எடுத்து மக்களிடையே வெளியிட்டுள்ளார். குறிப்பாக கூற வேண்டும் என்றால் படம் வெளியாகி இரண்டு நாட்களில் மட்டும் சுமார் ரூ.100 கோடி வசூலை பெற்றது அதேபோல் தற்பொழுது நான்கு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது நான்கு நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதை பட குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். மேலும் இவர்கள் அறிவிப்பு தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி  வருவது மட்டுமல்லாமல் பலரும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வசூலை முறியடிக்குமா இந்த இரண்டாம் பாகம் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக ஒரு சில ரசிகர்கள் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் பல திருப்பங்களுடன் வெளிவந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது கண்டிப்பாக இந்த திரைப்படம் முதல் பாகத்தை விட அதிகமாக வசூல் செய்யும் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment