அது கெடக்குது வாடா ஓரமா உக்காந்து ஒரு பீர போடுவோம்.! விவேக்கை தர தர என இழுத்து சென்ற மனோபாலா..

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களை விட்டு பிரிந்த நடிகர் தான் மனோபாலா தமிழ் சினிமாவில் சாதாரண மனிதனாக நுழைந்து தற்பொழுது வரை பல பிரபலங்களும் மதிக்கும்படியாக இருந்து மறைந்த நடிகர் மனோபாலாவின் மறைவு தமிழ் சினிமா பிரபலங்களால் தாங்கவே முடியவில்லை. தங்களது ஆதங்கத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் நடிகர் மனோபாலா உடன் இருந்த பொழுது எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றையெல்லாம் பகிர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்து வந்தார்கள்.

மனோபாலா பொதுவாகவே எந்த ஒரு உள்நோக்கத்துடனும் அடுத்தவர்களிடம் பேச மாட்டாராம். எப்பொழுதுமே ஜாலியாக இருப்பது மட்டுமல்லாமல் தன்னுடன் இருக்கும் நபர்களையும் ஜாலியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வாராம். இப்படி இருக்கும் நிலைமையில் நடிகர் விவேக்கும் மனோபாலா ஆகிய இருவர்களும் கப்பலில் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் பொழுது செய்த விஷயம் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது ஒரு படத்தின் சூட்டிங் பிரம்மாண்ட சொகுசு கப்பலில் நடந்ததாம் அப்பொழுது இயக்குனருக்கு எந்த பக்கத்தில் ஷாட் வைப்பது என்று குழப்பம் வந்துவிட்டதாம். அதனால் நடிகர் மனோபாலா யோசித்துக் கொண்டே இருந்தாராம். அதேபோல் அந்த நேரத்தில் கேமராமேன் வேல்ராஜ் ஒற்றை ஆளாக லைட்டிங் செட் செய்ய அலைந்து கொண்டே இருந்தாராம்.

அப்பொழுது நடிகர் விவேக்கிடம் வந்து ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது விவேக் படப்பிடிப்பு தொடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆகுது என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுது உடனே நடிகர் மனோபாலா அது கெடக்குது நீ வாடா நாம போயி ஒரு பீர போடுவோம் என்று விவேக்கிடம் கூறினாராம்.

இப்படி ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார்களாம் அந்த படப்பிடிப்பு தளத்தில் ஆனால் இவர்கள் இருவருமே காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் பொழுது ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்த்தார்கள்.தற்பொழுது இல்லை என்றாலும் இவர்கள் நடித்த திரைப்படங்கள் தற்பொழுதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருவதால் பலரும் நீங்கள் இல்லாதது தான் தற்பொழுது ஒரு குறையாக இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.

manobala
manobala
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment