300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அனாதையாக சென்ற குள்ளமணி.! அவரது மறைவிற்கு இந்தப் பிரபலம் மட்டும் தான் சென்றாரா.!

எத்தனை காமெடி நடிகர்கள் சினிமாவில் நுழைந்து நடித்து வந்தாலும் மக்கள் மனதில் மறையாத காமெடி நடிகராக திகழ்ந்தவர் குள்ளமணி இவர் கரகாட்டம் திரைப்படத்தில் பேரிச்சம்பழம் வியாபாரியாக வந்து நடித்து மக்கள் மனதில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் அதுமட்டுமல்லாமல் இவர் எம்ஜிஆர் காலத்திலிருந்தே நடித்து வரும் நடிகர் என்று கூட கூறலாம் அந்த வகையில் பார்த்தால் இவர் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் நடித்துள்ளாராம்.

இவர் எத்தனை திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கு பெரிதாக ஒரு சொத்தும் கிடையாது என்றுதான் கூறவேண்டும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும்பொழுது இவருக்கு சம்பளம்  கூட தரவில்லையாம் இதனால் இவர் எளிமையாக தான் வாழ்ந்து வந்தாராம் கடந்த 2013ஆம் கிட்னி பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் மேலும் இவரது இழப்பு குறித்து அப்போது பலரும் இவரது சடலத்திற்கு அஞ்சலி செலுத்த கூட வரவில்லையாம் ஆனால் இவர் மறைந்து விட்டார் என்ற தகவலை கேட்ட சரத்குமார் மட்டும் நேரில் வந்து அவரது மனைவிக்கு ஆறுதல் சொல்லி தனது இரங்கலை தெரிவித்தாராம்.

இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இத்தனை திரைப்படங்களில் நடித்து விட்டு எதற்காக இவருக்குப் சம்பளம் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பொழுது தரவில்லை என பல ரசிகர்களும் சமூக வலைதள பக்கங்களில் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

kulla mani2

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இவர் மட்டும் உயிரோடு இருந்தால் தற்பொழுது உள்ள காமெடி நடிகர்களுக்கு மிகவும் டப் கொடுப்பார் என சமூக வலைதள பக்கங்களில் கூறி வருவது மட்டுமல்லாமல் இவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையா என பலரும் ஆச்சரியப்பட்டு இந்த தகவலை பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version