மொட்டை ராஜேந்திரனின் மண்டை ப்ளே கிரவுண்ட் ஆனதற்கு இதுதான் காரணம்.! இணையத்தில் கசிந்த உண்மை.

வில்லன்,காமெடி நடிகன் என தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் தான் மொட்டை ராஜேந்திரன் இவர் தான் நடிக்கும் திரைப்படங்களில் கலகலப்பான பேச்சின் மூலம் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

இவரது குரலையும் தாண்டி இவரது கதாபாத்திரம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துவிட்டது இவர் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் என்றுதான் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார் அதற்கு முக்கிய காரணம் இவரது நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இவரது தலையை பார்த்து பலரும் இவருக்கு தீவிர ரசிகர்களாக மாறிவிட்டார்கள்

அந்த வகையில் பார்த்தால் மொட்டை ராஜேந்திரன் பல திரைப்படங்களில் தனது அயராத உழைப்பின் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் இவரது மொட்டைக்கு என்ன காரணம் என்பது பற்றி இவரே ஒரு தகவல் கூறியதாக கூறப்படுகிறது.

ஆம் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் கர்லிங் சிகையுடன் வலம் வந்த இவருக்கு ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் பொழுது இவரது தலைமுடிக்கு பிரச்சனை வந்துவிட்டதாம் அதாவது கேரளாவில் ஒரு சூட்டிங்கிற்கு சென்ற இவர் அங்கே இருக்கின்ற நீரில் விழும் சீன் எடுக்கப்பட்டுள்ளதாம்.

அப்பொழுதிலிருந்தே இவரது தலைமுடி பிரச்சனை ஆரம்பித்து விட்டதாம் ஆம் அந்த நீரில் விழுந்ததிலிர்ந்து இவருக்கு தலைமுடி எல்லாம் கொட்டிக் கொண்டே வந்ததாம் ஏனென்றால் அந்த நீர் வந்து தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கழிவு நீர் என இவரே சிரித்தபடி கூறினாராம்.

rajenthiran

ஆரம்பத்தில் கர்லிங் சிகையுடன் வலம் வந்த இவர் அந்த தொழிற்சாலையில் இருந்து வரும் நீரில் விழுந்ததால் இவருக்கு தலைமுடி முழுவதும் கொட்டி விட்டது இருந்தாலும் இவர் நடித்த பிதாமகன்,நான் கடவுள் போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்ததால் தொடர்ந்து மொட்டை ராஜேந்திரனாகவே தமிழ் சினிமாவில் தற்போது வலம் வருகிறார்.

Leave a Comment