இழுத்தடித்த விஷாலின் குடுமியை கொத்தாக பிடித்த லைக்கா.? ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.!

பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடத்தைப் பிடித்த நடிகர் தான் விஷால் ஆனால் இவருக்கு சமீப காலமாகவே நிறைய பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் பார்த்தால் விஷால் மற்றும் லைக்காவிற்கும் இடையே உள்ள பிரச்சனை இன்னும் தீரவில்லை.

அதாவது லைக்காவிற்கு தரவேண்டிய கடன் தொகையை விஷால் தராமல் இழுக்கடித்து வந்ததால் அந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று விட்டது. ஆனால் சொன்னபடி விஷால் பணத்தை தராததால் இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு இருக்கிறதாம்.

ஆம் அந்த விசாரணையில் பணத்தை கொடுக்கும் வரை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் வெளியாக இருந்த அனைத்து திரைப்படங்கள் தியேட்டர்கள் மற்றும் OTT போன்ற எதிலுமே வெளியாக கூடாது என்று தீர்ப்பு வந்திருந்ததாம். இந்த விஷயம் தான் தற்பொழுது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் விஷாலுக்கு பல கோடி சொத்து மதிப்பு இருந்தும் எதற்காக லைக்காவிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.இது தொடர்பாக விசாரித்த பொழுது விஷாலின் ஈகோவை லைக்கா தொட்டுவிட்டதால் இனி சமாதானமே கிடையாது கோர்ட் மூலமாகவே பணத்தை வாங்கி கொள்ளட்டும் என்று வாய்ச்சவடால் பேசி வருகிறாராம்.

மேலும் விஷால் தயாரித்தால் தான் படம் சிக்கலில் முடியும் அதனால் தனது நண்பர்களை வைத்து மறைமுகமாக ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார் என ஒரு விஷயம் இணையத்தில் வெளிவந்தது.இதனைத் தொடர்ந்து லைக்கா விஷால் வழக்கில் புதிய முடிவை எடுத்துள்ளதாம். அதாவது விஷாலை வைத்து படம் இயக்க போகும் இயக்குனர்களை எல்லாம் தன் பக்கம் லைக்கா இழுத்து வருகிறதாம்.

இப்படி இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் எப்பொழுது தான் சமாதானம் ஆவது யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள் எனவும் ஒரு சில பிரபலங்களும் கூறி வருகிறார்கள். மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்த விஷயம் எப்பொழுது தான் முடிவுக்கு வரும் என பல விதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

vishal

Leave a Comment

Exit mobile version