இயக்குனர் மணிரத்னம் போட்ட மாஸ்டர் பிளான்.? மீண்டும் சேரும் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய்..

தமிழ் சினிமாவில் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் வெளியான இந்த முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. முதல் பாகத்தின் வசூலை இரண்டாம் பாகம் முறியடிக்க வில்லை எனவும் தகவல் வெளியாகின.

இதனை தொடர்ந்து பார்த்தால் இந்த திரைப்படத்தில் அனைத்து ரசிகர்களையும் கவரும் படியாக நடித்திருந்த கதாபாத்திரங்கள் தான் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த ஆதித்ய கரிகாலன் மற்றும் நந்தினி காப்பாத்திரங்கள்.இவர்களது நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது என்றும் கூறினார்கள் மேலும் இவர்கள் இருவருமே இந்த திரைப்படத்திலும் ஒன்று சேரவே இல்லை.

அதே போல் இவர்கள் இருவரும் இந்த திரைப்படத்திற்கு முன்பு நடித்த படங்களிலும் சேரவில்லையாம். மேலும் இவர்களைப் பற்றி ஒரு தகவல் புதிதாக ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது அதாவது விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் மீண்டும் ஜோடியாக வைத்து இயக்குனர் மணிரத்னம் அவர்கள் ஒறு புதிய திரைப்படத்தை இயக்க இருப்பதாக இந்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் இதற்கான பேச்சு வார்த்தைகளும் தற்போது நடைபெற்று வருகிறதாம். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கதையைக் கொண்ட திரைப்படமாக இருக்கும் எனவும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதால்.

பல ரசிகர்களும் இது உண்மையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பல ரசிகர்களும் இவர்கள் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்தால் படத்தின் வசூல் பயங்கரமாக இருக்கும் எனவும் கூறி வருகிறார்கள்.

vikram

Leave a Comment

Exit mobile version