250 குடும்பங்களுக்கு விஜய் சேதுபதி செய்த மிகப்பெரிய காரியம்.? விஷயத்தை உடைத்த முக்கிய பிரபலம்..

மக்கள் செல்வன் என்ற பட்டத்தோடு தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகர் தான் விஜய் சேதுபதி இவர் பொதுவாகவே திரைப்படங்களிலும் சரி தனது நிஜ வாழ்க்கையிலும் சரி எதார்த்தமாக இருப்பவர் என்று கூட கூறலாம். மேலும் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பின்பு கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். அவ்வாறு இவர் கதாநாயகனாக நடித்த பல திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இதனை தொடர்ந்து பார்த்தால் கதாநாயகனை தவிர்த்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாகவும் தற்பொழுது நடித்து வருகிறார் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் போன்ற பலமொழி திரைப்படங்களிலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருவது இவரது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தற்பொழுது இவர் செய்த ஒரு விஷயம் பற்றி ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது பிரபல இயக்குநரும்,பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி நடிகர் விஜய் சேதுபதி பற்றி கூறியுள்ளாராம் அதில் பெப்சி யூனியனில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 250 பேருக்கு வீடு கட்டி கொடுக்க பணம் பற்றாக்குறையாக இருக்கிறது என்பதை கூறினேன்.

உடனே விஜய் சேதுபதி 250 பேருக்கு தலா ஒருவருக்கு ரூபாய் 50,000 கொடுத்து உதவியுள்ளாராம். அது மட்டுமல்லாமல் மேலும் 30 லட்சம் தேவைப்பட அவரிடம் இது குறித்து கூறும் பொழுது தனது உதவியாளர் மூலம் பணத்தை கொடுத்தார் என இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி  வருகிறது

இந்த தகவலை அறிந்த இவரது ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதி எதார்த்தமாக இருப்பது மட்டுமல்லாமல் உதவும் குணமும் உடையவர். தான் உண்டு தனது வேலை உண்டு இல்லாமல் சாக மனிதர்களுக்கும் மரியாதை கொடுக்கும் ஒரு நல்ல மனிதர் என்றும் இவரைப் பற்றி புகழ்ந்து வருகிறார்கள்.

vijay sethupathi

Leave a Comment

Exit mobile version