இரண்டு நாட்கள் முடிவில் பொன்னியின் செல்வன் 2 எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா.? ஒருவேள இதுதான் உண்மையோ..

கடந்த 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை விட இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு தருகிறார்கள்.

இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருவது மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் கைவிட்ட கதையை மணிரத்னம் அவர்கள் அசால்டாக எடுத்ததைப் பற்றி பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இரண்டு நாட்கள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான பொழுது சுமார் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது தற்பொழுது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இரண்டு நாட்கள் முடிவில் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி  வருகிறது.

மேலும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் பலரும் இவ்வளவுதான் இரண்டு நாட்கள் வசூல் என தெரிவித்து வருகிறார்களாம். இதனை தொடர்ந்து பார்த்தால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை மணிரத்னம் அவர்கள் தங்களது அசாத்திய திறமை மூலம் இயக்கியுள்ளார். பல திருப்பங்களுடன் இந்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் முடிந்திருக்கும்.

ponniyin selvan 2
ponniyin selvan 2

ஆனால் இறுதி காட்சியில் ஆதித்த கரிகாலன் மறைந்த பிறகு படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களின் கண்களில் கண்ணீர் தானாக வெளிவந்ததாகவும் படத்தை பார்த்துவிட்டு வந்த ஒரு சில ரசிகர்கள் தங்களது திரை விமர்சனத்தை கொடுத்ததையும் நாம் பார்த்திருப்போம்.

Leave a Comment