இரவு பார்ட்டிக்கு போனதால் தான் என் வாழ்க்கை இப்படி மாறியது உண்மையை போட்டு உடைத்த சினேகா.!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்த நடிகை என்றால் அது சினேகா தான் இவர் பல திரைப்படங்களில் தனது சிரிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்ததால் இவருக்கு ரசிகர்கள் புன்னகை அரசி என்ற பட்டத்தைக் கொடுத்து விட்டார்கள். இவர் பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்து மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விட்டார்.

அதிலும் இவர் தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டத்தையும் தனக்கென ஒரு புதிய நடிப்பு திறமையையும் உருவாக்கிக் கொண்டார். மேலும் இவரது திருமண வாழ்க்கையில் தன்னோடு திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் பிரசன்னாவை  காதலித்து மணம் முடித்துக் கொண்டார் தற்போது இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

அதுமட்டுமல்லாமல் சினேகா எப்பொழுது தமிழில் மீண்டும் நடிக்க வருவார் என பல ரசிகர்களும் கேட்டு வருகிறார்கள் ஆனால் இவருக்கு சரியான கதாபாத்திரம் எதுவும் கிடைக்காமல் திரைப்படங்களில் நடிப்பதற்கு பொறுமையாக இருக்கிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சினேகா ஒரு இரவு தான் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளாராம். ஆம் இவர் ஒரு முறை மலையாள ஸ்டார் நைட் என்ற நிகழ்ச்சிக்கு வந்துள்ளாராம் அப்பொழுது சினேகாவை பார்த்து நீங்கள் பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே இருக்கிறீங்க எனக்கூறி இவருக்கு முதன் முதலாக மலையாளத் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.ஆனால் இவர் நடித்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை மலையாளத்தில் பெறவில்லையாம்.

sneha2

இருந்தாலும் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் மட்டும் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் நீங்கள் சினிமாவிற்கு வந்திருக்க முடியாது என இவரை கேள்வி செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version