சொந்த படம் எடுத்து நடுதெருவுக்கு வந்து வெறும் 5 ரூபாயுடன் நடுரோட்டில் நின்ற சரத்குமார்.. மனுஷனுக்கு இப்படி ஒரு சோதனையா.?

தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சரத் குமார் இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அதன் பிறகு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார் அதனைத் தொடர்ந்து கதாநாயகனாக ஒரு சில திரைப்படங்களில் நடிக்க துவங்கி இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.

மேலும் இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வருகின்ற 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.மேலும் இந்த திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்கிறது இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சரத்குமார் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி கூறியுள்ளாராம்.

அதில் தற்பொழுது உள்ள இளைஞர்கள் மார்க் குறைவாக எடுத்தால்,காதல் தோல்வி அடைந்தால் உடனே தவறான விஷயத்தை கையில் எடுக்கிறார்கள் ஆனால் அந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு யோசிப்பதில்லை எதற்காக இந்த உலகில் பிறந்தார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு பல ஆண்டுகள் ஆகிறது.

அவர்கள் யோசித்தது போல் நான் எனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் யோசித்து இருந்தால் நான் பலமுறை தவறான விஷயத்தை கையில் எடுக்க வேண்டும் என நடிகர் சரத்குமார் பொன்னியின் செல்வன் படத்தில் எப்படி நடித்தார் என்பதை பற்றி எப்படி இந்த திரைப்படத்தில் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளாராம்.

அதில் தனது வாழ்க்கையில் அடிபட்ட அவமானங்கள்,பிரச்சனைகளை பற்றி பேசி உள்ளார் நான் சொந்த படம் எடுத்து நஷ்டமாகி அனைத்து பொருட்களையும் விற்று விட்டு வெறும் ஐந்து ரூபாய் உடன் நடுரோட்டில் நின்றேன் அப்பொழுது நான் மனதை தளர விட வில்லை .காசில்லாமல் பயந்து பயந்து பஸ்ஸில் செல்வேன் அப்பொழுது நடுராத்திரியில் எனது நண்பன் 150 ரூபாய் கொடுத்து உதவி செய்தான்.

அதன் பிறகு ஒவ்வொரு விஷயங்களிலும் நான் அடிபட்டு கற்றுக் கொண்ட அனுபவங்களை வைத்து தற்பொழுது ஒரு நல்ல நிலைமையில் உள்ளேன் என்று அந்தப் பேட்டியில் சரத்குமார் கூறியதாக இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி  வருகிறது.

sarathkumar
sarathkumar

Leave a Comment