சூரியவம்சம் இரண்டாம் பாகம் பற்றி அதிரடி அப்டேட் கொடுத்த சரத்குமார்.?

ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்த நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சரத்குமார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள்.

அதிலும் குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான சூரியவம்சம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் பல பிரபலங்கள் நடித்திருந்தாலும் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது என்று தான் கூற வேண்டும். மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சரத்குமார் நிறைய திரைப்படங்களில் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி வந்தது அதிலும் குறிப்பாக சூரியவம்சம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

இதை தொடர்ந்து சரத்குமார் வெளியே தான் நான் இப்படி இருக்கிறேன் எனக்குள் நிறைய கஷ்டங்கள் புதைந்துள்ளது என கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதாவது சென்னையில் பேசிய அவர் சூரிய வம்சம் இரண்டாம் பாகம் குறித்து பேசி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆறு மாதமாக பேச்சுவார்த்தை இந்தத் திரைப்படத்திற்காக நடந்து வருவதாகவும்.

sarathkumar

கதை உறுதி செய்தால் படம் சீக்கிரம் தொடங்கப்படும் என்றும் கூறினாராம் அது மட்டுமல்லாமல் நூறு வயது வரை கதாநாயகனாக நடிப்பேன் 36 மணி நேரத்திற்கு மேலாக தூங்காமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறேன் அதுதான் எனது வெற்றிக்கு முதல் காரணம் என்று சரத்குமார் உருக்கமாக பேசியதாக இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version