சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திய நபருக்கே நித்யானந்தா புத்தகத்தை கொடுத்த ரஞ்சிதா.! அவர் என்ன செய்தார் பார்த்தீர்களா.!

தமிழ்நாட்டில் மருத்துவர்கள்,அரசியல்வாதிகளை விட தற்பொழுது போலி சாமியார்களின் எண்ணிக்கை தான் அதிகம் ஆகி கொண்டே போகிறது அந்த வகையில் கூற வேண்டுமென்றால் கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசு நித்தியானந்ததை வலை போட்டுத் தேடி வருகிறது இவரைப் பற்றி சொல்லவே வேண்டாம் அந்த அளவுக்கு சினிமா பிரபலங்களை விட சமூக வலைதள பக்கங்களில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாகி கொண்டே வந்தார்.

இவர் ஒரு காலத்தில் தன்னிடம் வரும் பக்தர்களை தவறான முறையில் வழிப் படுத்துவது,நன்கொடை கேட்க வந்த பெண்களிடம் தவறான செயல்களில் ஈடுபட்டது,குழந்தைகளை கடத்துதல் போன்ற பல புகார்கள் இவர் பெயரில் இருக்கிறது மேலும் இவருக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலக அளவில் இவரை பலரும் வழிபட்டு வந்தார்கள் ஆனால் இவர் செய்த வேலையால் பலரும் இவரை தற்பொழுது விமர்சித்து வருகிறார்கள்.

இவர் செய்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவரை மத்திய அரசு ஒரு பக்கம் வலை போட்டு தேடி வந்தாலும் இன்னொரு பக்கம் இவர் ஜாலியாக தான் இருக்கிறார் அதிலும் குறிப்பாக இவருடன் ஒரு காலத்தில் சேர்ந்து ஆட்டம் போட்ட நடிகை தான் ரஞ்சிதா நித்தியானந்தத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்த வீடியோக்கள்,புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடையே இவர் மிகவும் விமர்சிக்கப்பட்டு வந்தார்.

ரஞ்சிதா ஜெய்ஹிந்த் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் இந்நிலையில் ஒரு கட்டத்தில் நித்தியானந்தத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்,வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இவரது பெயரை டேமேஜ் செய்து விட்டது.

இவரைப் பற்றிதான் தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது தெலுங்கு சினிமாவில் பிரபல எழுத்தாளராக வலம் வருபவர் வசனகர்த்தாவான பரிச்சூரி கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ரஞ்சிதாவை பற்றி கூறியுள்ளாராம் அதில் எனது மகளும் ரஞ்சிதாவும் மிகவும் நெருங்கிய தோழிகள் எனது மகளுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார்.

இவரிடம் இருக்கும் திறமையை பார்த்து இவருக்கு நான் கடப்பா ரெட்டம்மா திரைப்படத்தில் நடிக்க வைத்தேன் இருந்தாலும் ஒரு முறை எனது வீட்டிற்கு வந்த ரஞ்சிதா நித்யானந்தாவின் புகைப்படத்தை காட்டி இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளாராம்.

அப்பொழுது ரஞ்சிதா புகைப்படத்தை காட்டியதும் இவர் ஒன்றும் கூறவில்லை ஆனால் ஒருவேளை அப்பொழுது ரஞ்சிதாவிற்கு நான் அறிவுரை கூறி இருந்தால் அவர் இந்த அளவிற்கு போக மாட்டார் என தற்பொழுது வருத்தப்படுகிறேன் என இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாக இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிகவேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment