பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா.? மணிரத்னம் என்றால் சும்மாவா..

தமிழ் திரையுலகில் பணியாற்றி வந்த பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை மணிரத்னம் அவர்கள் தனது திறமையை வைத்து அபூர்வமாக எடுத்து காட்டி விட்டார் மேலும் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை விட இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறதாம்.

அந்த வகையில் பார்த்தால் இந்த இரண்டாம் பாகத்தில் பல திருப்பங்களுடன் வெளியானாலும் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்களும் நல்ல விமர்சனங்களை கொடுத்து விடுவதால் படத்தை பார்க்காத ரசிகர்களும் பார்ப்பதற்கு மிக ஆவலாக இருக்கிறார்கள் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இரண்டாம் பாகத்தில் ஆதித்த கரிகாலன் மறைந்த பிறகு வரும் காட்சிகள் அனைத்தும் மக்கள் மனதை நெகிழ வைத்து விட்டதாம். ஒரு சில ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும் தற்பொழுது தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதாவது உலக அளவில் இரண்டு நாட்கள் வசூல் நூறு கோடியை தாண்டியது எனவும் தகவல் வெளியாகி நிலையில் தற்போது தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றி தகவல் வெளியாகிய நிலையில் தற்பொழுது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாகவும் பரவி வருகிறது என்றே கூறலாம்.

ponniyin selvan2
ponniyin selvan2

ஆம் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூல் ரூ.20 கோடி எனவும் தற்போது இந்த திரைப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் முடிவில் ரூ.40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. ஒரு சில ரசிகர்கள் இதனை பார்த்துவிட்டு படம் மிகவும் பிரமாண்டமாக இயக்குனர் மணிரத்னம் அவர்கள் எடுத்துள்ளார் அதனால் கண்டிப்பாக இன்னும் ஒரு சில நாட்களில் அதிக வசூல் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment