ஒட்டுமொத்த கஷ்டத்தையும் மனதில் போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் கரகாட்டக்காரன் பட நடிகை கனகா.! வாழ்க்கையில் நடந்த பல மர்மங்கள்.!

வெள்ளித்திரையில் கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை தான் கனகா இந்த திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் தமிழ்த் திரையுலகில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக கனகா கரகாட்டக்காரன் திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் கரகாட்டக்காரன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த கனகா சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான அதிசயப் பிறவி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பை தந்துவிட்டது இருந்தாலும் ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு எதுவும் பெரிதாக கிடைக்காமல் தவித்து வந்தார்.

இந்நிலையில் இவரை பற்றி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்று கேட்டாள் கனகா ஏன் சினிமாவில் நடிக்க தயங்கிவருகிறார் என்பது பற்றிதான் கனகா முதலில் ஒருவரை காதல் செய்து வந்துள்ளாராம் பின்பு அவர்களுக்கு ஒரு சில காரணங்கள் குறித்து இருவரும் பிரிந்து விட்டார்களாம் அதன் பிறகு இவருக்கு திருமணம் செய்து கொள்வதற்காக பல முயற்சிகள் செய்தார்களாம்.

இருப்பினும் இவருக்கு கல்யாணத்தில் விருப்பமில்லாததால் கல்யாண வாழ்க்கையையும் இவருக்கு தோல்வியடைந்து விட்டதாம் இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது அம்மாவின் இழப்பைத் தாங்க முடியாமல் அவர் பெரிய அளவில் துயரத்தில் மூழ்கி விட்டாராம்.

மேலும் இவர் இறுதியாக நடித்த திரைப்படம் என்றால் அது விரலுக்கேத்த வீக்கம் இதில் விவேக்குக்கு ஜோடியாக நடித்திருப்பார் அதுமட்டுமல்லாமல் இவர் வசித்துவரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை எனவும் இரண்டு பெண்களை மட்டும் இவர் வீட்டில் உள்ளதாக பலரும் கூறுகிறார்கள்.

kanaka3
kanaka3

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவரது வாழ்க்கையை பார்த்தால் மிகவும் பாவமாக இருக்கிறது என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ் சினிமாவில் மீண்டும் தலை காட்டுவாரா என பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்புகிறார்கள்.

Leave a Comment