இயக்குனர் மணிரத்னம் அவர்களின் திரைப்படத்தில் இந்த ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்காதா.? இந்த விஷயத்தில் அப்படிப்பட்ட கோபம் இவருக்கு வருமா.?

தமிழ் திரையுலகில் நிறைய ஹிட் திரைப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்ட இயக்குனர் தான் மணிரத்னம் அவர்கள் இவர் தமிழ் சினிமாவில் பகல் நிலவு என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அதனைத் தொடர்ந்து மௌன ராகம்,நாயகன்,அக்னி நட்சத்திரம்,அஞ்சலி,தளபதி போன்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

மேலும் இந்த திரைப்படங்களை தொடர்ந்து இவரது இயக்கத்தில் பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துவிட்டது அதிலும் குறிப்பாக இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இரண்டாம் பாகமும் நல்ல விமர்சனத்தை பெற்று வருவதால் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படி பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு தனது புதிதாக இயக்கும் திரைப்படத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்தால் அவருக்கு சுத்தமாகவே பிடிக்காது என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இயக்குனர் மணிரத்னம் அவர்கள் எந்த ஒரு சடங்கு சம்பிரதாயங்களின் மீதும் பெரிய நம்பிக்கையற்றவராம்.

இவரது திரைப்படத்திற்கு பூஜை கூட போட மாட்டாராம் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே கேமராவின் முன்னே தேங்காய் மேல் சூடம் வைத்து ஏற்றி உடைப்பது வழக்கமானால் இவரது திரைப்படத்தில் அப்படி செய்தால் உடனே இவர் அதிகபடியான கோபத்தை வெளி காட்டுவார் என இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் இந்த தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பல ரசிகர்களும் மணிரத்னம் கொஞ்சம் அமைதியாக இருப்பதை பார்த்தால் அவர் கோவக்காரராக தான் இருப்பார் என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment