வறுமையில் நண்பரின் பழைய ஆடைகளை அணிந்து கொண்டு நடித்த அஜித்.? இவருக்கு பின்னாடி இப்படி ஒரு சோகம் இருக்கிறதா.?

தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நடிகர் அஜித் மெக்கானிக் வேலை செய்து வந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் அதிலும் அங்கேயே கார்,பைக் ஓட்ட கற்றுக்கொண்டு அப்பொழுது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்த அஜித்திற்கு மாடலிங் துறையில் சிறிய சிறிய வாய்ப்பு கிடைக்க அதுவே நிறைய திரைப்படங்களில் பின்பு நடித்து வந்தார்.

அதன் பின்பு பார்த்தால் சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் நடிகர் அஜித்திற்கு கிடைத்தது.ஆனால் இதில் வரும் வருமானத்தை வைத்து எப்படியாவது ஒரு மெக்கானிக் தொழிலை சொந்தமாக ஆரம்பிக்கலாம் என்று அஜித் நம்பினார் ஆனால் அவருக்கு முழு நேர வேலையாக சினிமா அமைந்து விட்டதாம்.

மேலும் நடிகர் அஜித்தை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் தான் பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்.இவரது மகன் சரணின் நெருங்கிய பள்ளி தோழனாகவும் அஜித் அப்பொழுது இருந்துள்ளார்.அப்படி இருக்கும் பட்சத்தில் அடிக்கடி பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் வீட்டிற்கு அஜித் சென்று வருவாராம்.

குறிப்பாக விளம்பர திரைப்படங்களில் நடிக்கும் பொழுது நடிகர் அஜித்திடம் அதிகமாக பணம் இல்லாத காரணத்தினால் இவரது நண்பனான சரனின் ஆடைகளை வாங்கிக்கொண்டு விளம்பரங்களில் நடித்துள்ளார் என இந்த தகவல் வைரலாகி வருகிறது இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் பல சினிமா பிரபலங்களும் நடிகர் அஜித் ஏழ்மையில் வாடினார் என்பது உண்மைதான் என்றும் கூறி வருகிறார்களாம்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் அஜித் இவரது திரைப்படங்கள் என்றால் பல கோடி வரை வசூல் செய்துவிடும் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே ஒரு பொழுதும் அஜித் தன்னை வளர்த்து விட்டவர்களை மறக்கவே மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது பொதுவாகவே உதவி என்று யாராவது வந்தால் உடனே உதவி செய்யும் குணம் நடிகர் அஜித்திற்கு உண்டு என்பதும் ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம் தான்.

ajith
ajith

Leave a Comment