ஜாலியாக கொடைக்கானலில் தனது மனைவியுடன் வலம் வரும் சூர்யா.?

தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா இவர் தற்பொழுது இயக்குனர் சிறுத்தை சிவா அவரது இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும்.

என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் கடந்த சில காலமாக இவரது நடிப்பில் உருவாகி வரும் ஒரு சில திரைப்படங்களை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.இவரது நடிப்பில் தற்போது வாடிவாசல்,கங்குவா போன்ற திரைப்படங்கள் உருவாகி வந்தாலும் இந்த கங்குவா திரைப்படத்தை ரசிகர்கள் பலரும் எப்பொழுது படப்பிடிப்பு முடியும் என பல விதமான கேள்விகளையும் எழுப்பி வரும் நிலையில்.

தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் காட்டுப்பகுதிகளில் நடைபெற்று வருகிறதாம். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் அந்த அடர்ந்த காட்டில் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்து வருகிறார்களாம் மேலும் தற்பொழுது நடிகர் சூர்யா அவர்களைப் பற்றி ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் சூர்யா ஷூட்டிங் இல்லாத நேரத்தில் தனது மனைவி ஜோதிகாவுடன் கொடைக்கானலில் பல இடங்களை சுற்றிப் பார்த்து வருகிறாராம் தற்பொழுது கோடை விடுமுறை என்பதால் பல மக்களும் அங்கு சென்று தங்களது கோடை விடுமுறையை ஜாலியாக ரசிப்பார்கள்.

surya

என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பார்த்தால் ரசிகர்களின் கண்களில் படாமல் நடிகர் சூர்யா தனது மனைவியுடன் அங்கு பல இடங்களை சுற்றி பார்த்து வருவதாக இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

surya

Leave a Comment

Exit mobile version