ஃபில்டில் இருக்கும் அஜித் விஜயை விட பல கோடி சொத்து சேர்த்து வைத்திருக்கும் பிரசாந்த்.? ஆத்தாடி இவ்வளவு சொத்தா தலைவனுக்கு…

வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த நடிகர் தான் பிரசாந்த் இவரது முதல் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதால் அதனை தொடர்ந்து லத்தி,திருடா திருடா போன்ற நிறைய திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமாகி விட்டார் மேலும் இவரது நடிப்பில் வெளியான ஜீன்ஸ் திரைப்படம் சூப்பர்  ஹிட் ஆனது.

தற்பொழுது இவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இவரது திரைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் மீண்டும் நடிப்பாரா என பல விதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.இந்நிலையில் நடிகர் பிரசாந்த் அவர்களின் சொத்து மதிப்பு பற்றி ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் சென்னையின் முக்கியமான பகுதியான தியாகராய நகரில் பல லட்சங்கள் கொடுத்து பிரசாந்த் அவர்கள் இடம் வாங்கினாராம் ஆனால் தற்பொழுது அந்த இடத்தில் மிக பிரம்மாண்டமாக பிரசாந்த் கோல்ட் டவர் என்ற பெயரில் பல கோடி மதிப்புள்ள கட்டிடத்தை கட்டி விட்டார்.

மேலும் அதில் ஜாய் ஆலுக்காஸின் ஷோரூமும் இந்த டவரில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது அது மட்டுமல்லாமல் இதில் பிரசாந்த் அவர்களும் பார்ட்னர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று தான் 2008 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பிரசாந்த் கோல்ட் டவரில் மொத்தம் 17 மாடிகள் இருக்கிறதாம் உலகின் மிகப்பெரிய ஜாய் ஆலுக்காஸ் ஷோரூம் இங்குதான் அமைந்துள்ளதாம். மேலும் 8 மாடிகளில் மொத்தம் ஒரு லட்சம் சதுர அடியில் ஜாய் ஆலுக்காஸ் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதனைத் தவிர்த்துப் பார்த்தால் பிரசாந்த் அவர்களின் அலுவலகமும் அந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் தான் இயங்கி வருகிறது பொதுவாகவே சென்னையில் ஒரு சாதாரண கடையை வாடகைக்கு எடுக்க வேண்டுமானால் பல லட்சங்களை கொட்டிக் கொடுக்க வேண்டும் ஆனால் தற்பொழுது நமது நடிகர் பிரசாந்த் கட்டி வைத்துள்ள இந்த பிரசாந்த் கோல்ட் டவர் கட்டிடம் மட்டுமே பல கோடி வரை இருக்குமாம்.

மேலும் இவருக்கு நிறைய இடங்களில் நிறைய சொத்துக்கள் இருக்கிறதாம் இதனை தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு இவர் சொத்து சேர்த்து விட்டார் இதற்கு மேல் எதற்காக அவர் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

prasanth
prasanth

Leave a Comment