நடிகர் மனோபாலா தனது கடைசி பட இயக்குனரிடம் படுத்தபடியே என்ன கூறியுள்ளார் தெரியுமா.? கண்ணீர் மல்க இயக்குனர் போட்ட பதிவு.!

தமிழ் திரை உலகில் இயக்குனர் என்ற அடையாளத்தோடு கால்பதித்து அதன்பின்பு தயாரிப்பாளர்,நடிகர் என பல திறமைகளை கொண்டு வலம் வந்த நடிகர் மனோபாலாவின் இழப்பு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தி விட்டது. கடந்த சில மாதங்களாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் மனோபாலா அவர்கள் நேற்று மறைந்த சம்பவம் தான் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை வருத்தத்தில் ஆழ்த்தி விட்டது.

கிட்டத்தட்ட பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் இவர் நேற்று மறைந்த செய்தியை கேட்ட பல பிரபலங்களும் இவரது வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்கள். வரமுடியாத பிரபலங்கள் தங்களது வருத்தத்தை சமூக வலைதள பக்கங்கள் மூலம் வெளிப்படுத்தினார்கள்.

அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த திரைப்படத்தின் இயக்குனர் ஒரு பதிவை போட்டுள்ளார். ஆம் யார் அந்த இயக்குனர் என்று கேட்டால் வேறு யாரும் இல்லை நடிகர் மனோபாலா அவர்கள் கதிர்வேலு இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.இந்த திரைப்படத்தின் இயக்குனர் கதிர் தனது ட்விட்டரில் இவர் மறைந்த செய்தியை கேட்டு ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில் கடைசியாக படப்பிடிப்பில் படுத்தபடியே என்னால் முடியலடா மருத்துவமனைக்கு போய் வருகிறேன் என சொல்லிவிட்டு போனவரே இப்படி சொல்லாமல் போவது முறையா? கடைசி பிறந்த நாளை எம்மோடு கொண்டாடிவிட்டு இப்படி நடுவழியில் திண்டாட விட்டுவிட்டு போதல் சரியா? என இயக்குனர் கதிர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இனிமேல் திரைப்படங்களில் உங்களை காண முடியாத நீங்கள் நடித்த அனைத்து படங்களும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் நாங்கள் உங்களை மிகவும் மிஸ் பண்ணுகிறோம் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment