மறைந்த நடிகர் மனோபாலாவின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா.? மனம் வெறுத்து அவரே எழுதிய கடிதம்..

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்,இயக்குனர்,காமெடி நடிகர் போன்ற பல திறமைகளை கொண்டு வலம் வந்த நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் மனோபாலா இவர் உடல் நலக்குறைவால் கடந்த மே மூன்றாம் தேதி ரசிகர்களை விட்டு பிரிந்து விட்டார். அந்த வகையில் பார்த்தால் இவரது இழப்பை தாங்க முடியாமல் பல பிரபலங்களும் இவருடன் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றையெல்லாம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களது இரங்கலை தெரிவித்து வந்தார்கள்.

மேலும் நடிகர் மனோபாலா தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி நடிகனாக நடித்துள்ளார். அவ்வாறு இவர் நடித்த கதாபாத்திரம் அனைத்து ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்திருக்கும். இதனைத் தொடர்ந்து பார்த்தால் தற்பொழுது நடிகர் மனோபாலா அவர்களை பற்றி ஒரு புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் மனோபாலா  சித்ரா லட்சுமணனுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளாராம். அதில் தனது திரை வாழ்க்கையில் நடந்த அவமானம்,தோல்வி போன்றவற்றையெல்லாம் பற்றி அதில் எழுதி உள்ளாராம்.

இயக்குனர் மணிவண்ணன்,சித்ரா லட்சுமணன்,மனோபாலா போன்றோர் எல்லாரும் பாரதிராஜா திரைப்பட பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்துள்ளார்களாம். மேலும் நடிகர் மனோபாலா அந்த கடிதத்தில் டியர் சித்ரா சட்டென்று ஒரு எண்ணம் ஏதோ எழுத வேண்டும் என்று நினைவுக்கு வந்தது நீங்கள் தான்.

தப்பா இது? என்று தொடங்கி நடிகர் மனோபாலா அந்த கடிதத்தில் பல விஷயங்களை எழுதி உள்ளாராம். அதுமட்டுமல்லாமல் அந்த கடிதத்தில் மனோபாலா அவர்கள் சித்ரா நான் தொழிலை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்கு மட்டும் தான் தெரியும் எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்து வந்தவன் நான்.

எல்லா இடங்களிலும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கும் மனிதர்கள். நான் வரணும் சித்ரா கண்டிப்பா வரணும் என்னை பார்த்து சிரிப்பவர்களை நான் பார்த்து சிரிக்கும் காலம்  கண்டிப்பாக வரும் சித்ரா என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

manobala
manobala

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் நடிகர் மனோபாலாவின் மனதிற்குள் இவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அவர் வெளியே காட்டிக் கொள்வதில்லை.எப்பொழுதும் சகஜமாகவே இருந்துள்ளார் என்று சோகமாக தங்களது கருத்துகளையும் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment