நடிகர் கௌதம் கார்த்திக்கு என்ன ஆச்சு கார்,பைக் எல்லாம் விற்று விட்டாரா.? இவருக்கு இப்படி ஒரு நிலைமை இருந்ததா..

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக கால் பதித்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை புதிதாக உருவாக்கிக் கொண்ட நடிகர் தான் கௌதம் கார்த்திக் இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தையும், தனக்கென ஒரு புகழையும் ரசிகர்கள் மத்தியில் தேடிக்கொண்டார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் பத்து தல திரைப்படம் வெளியானது நடிகர் சிம்பு மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள் குறிப்பாக கௌதம் கார்த்திக் நடித்த கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்து விட்டது என்றே கூறலாம். இவரது நடிப்பில் வெளியான ஆகஸ்ட் 16 1947 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் கௌதம் கார்த்திக் அவர்கள் பல படங்களில் நடித்து கொண்டு பிசியாக இருக்கிறார் மேலும் இவரது திருமண வாழ்க்கையில் பிரபல நடிகை மஞ்சிமாவை காதலித்து கடந்த நவம்பர் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பிறகு ஒரு பேட்டியில் பல விஷயங்களை கூறியுள்ளாராம்.

அதில் நான் யாரிடமும் பணம் வாங்க கூடாது என்று நினைப்பேன் அதனால்தான் எனது திருமணத்தை கூட எனது சொந்த செலவில் நடத்திக் கொண்டேன் கொரோனா காலத்தில் கூட எனது பைக் மற்றும் கார் போன்றவற்றை எல்லாம் விற்று விட்டேன்.

அப்போது எனக்கு துணையாக இருந்தவர் தான் மஞ்சிமா நான் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அவரிடம் கலந்து யோசித்து விட்டு தான் எதாக இருந்தாலும் செய்வேன் என அவர் கூறியதாக இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

gautham karthik
gautham karthik

Leave a Comment