துப்பாயில் புதிய பிஸ்னஸ்.? முதலீடு மட்டுமே இவ்வளவு கோடியாம்.? சினிமா பிரபலங்களை திக்குமுக்காட வைத்த நயன்தாரா.

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் ஐயா திரைப்படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பின்பு டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து அசத்தினார்.

அந்த வகையில் விஜய், ரஜினி, அஜித், சூர்யா, சிம்பு போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் இவர் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில்  நடித்து முடித்துள்ளார்.  இதை தொடர்ந்து கனெக்ட் திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.இவர் தமிழை தாண்டி ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் திரைப்படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.

இது போக நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் இணைந்து திரைப்படங்களை தயாரித்து வருகின்றன அதில் தற்போது இவர்கள் கவின் நடிப்பில் உருவாகி வரும் ஊர்க்குருவி இந்த திரைப்படத்தை தயாரித்து வருகின்றன.  நயன்தாரா சினிமா உலகை தாண்டி வேறு சில தொழில் நிறுவனங்கள் போன்றவற்றையும்  நடத்தி வருகிறார்.

இதனிடையே நயன்தாரா சாய் வாலா என்ற டீ நிறுவனத்தில் இவரும் ஒரு பங்குதாரராக விளங்கி வருகிறார் மேலும் அண்மையில் இவரது தோழியுடன் இணைந்து லிப் பாம் என்ற அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கி உள்ளார். இந்த நிலையில் தற்போது நயன்தாரா புதிதாக ஒரு பிஸ்னஸ் தொடங்க உள்ளதாக தெரிகின்றன.

ஆம் அவர் துபாயில் 100 கோடி முதலீட்டில்  எண்ணெய் பிஸ்னஸ் நடத்த திட்டமிட்டுள்ளாராம். இது குறித்து முடிவெடுக்க தான் நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து இருவரும் புத்தாண்டன்று துபாய்க்கு சென்றதாக கூறப்படுகிறது.

Leave a Comment