உங்க படத்த பாக்குறதுக்கு பேசாமல் இருக்கலாம் என கூறிய நெட்டிசன் – பதிலடி கொடுத்த முருங்கைக்காய் சிப்ஸ் நடிகர் சாந்தனு.

தமிழ்சினிமாவில் வாரிசு நடிகர்கள் அதிகம் ஆனால் அவர்கள் எல்லாரும் நிலையில் நின்றார்கள் என்றால் அது கேள்விக்குறியாக தான். பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு தமிழ்சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அந்த திரைப்படங்கள் பெரிய அளவு வெற்றியை கொடுக்காததால் தற்போது வரையிலும் சினிமாவுலகில் போராடிக் கொண்டிருக்கிறார்.

கடைசியாக கூட தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது இவர் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் 10 ம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதால் மக்கள் படத்தை பார்க்க எதிர்நோக்கி இருக்கின்றனர். இந்த படம் குறித்து நடிகர் சாந்தனு சமூக வலைதள பக்கத்தில் பேசினார் அவர் கூறியது:  இது ஜஸ்ட் ஜாலி பொழுதுபோக்கு படம்.

Intellectual minds இந்த படத்தை முன்னுரிமை கொடுக்க வேண்டாம்  உங்கள் வாழ்க்கையில் இதை விட அதிகமாக intellectual விஷயம் இருக்கும் மற்ற எல்லோருக்கும் ஜீரோ எதிர்பார்ப்புடன் வந்து பாருங்கள் உங்கள் மன அழுத்தத்தை மறப்பீர்கள் என கூறி உள்ளார் இதை கேட்ட நெட்டிசன் ஒருவர்.

வெறும் பொழுதுபோக்கு படத்திற்கு ஏன் நாங்க பணத்தை வேஸ்ட் செய்ய வேண்டும் என கேட்டுள்ளார் அதற்கு பதில் அளித்த நடிகர் சாந்தனு அப்ப பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க சிம்பிள் என கூறினார். இவ்வாறு அவர் கூறிய செய்தி இணைய தள பக்கத்தில் தற்பொழுது தீயாய் பரவி வருகிறது

Leave a Comment

Exit mobile version