ஒன்னும் மண்ணுமாக பழகி வந்த நண்பனின் முதுகில் குத்திய நெல்சன்.! குமுறும் பிரபல நடிகர்

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் முதன்முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் அதன்பிறகு அதே தொலைக்காட்சியில் உதவி கதாசிரியராக பணியாற்றியவர் அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர் கூட்டங்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது அய்லான் என்ற திரைப்படத்திலும் டான் என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் இந்த இரண்டு திரைப்படங்களும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அதேபோல் சிவகார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தபொழுது நெல்சன் சிவகார்த்திகேயன் இருவரும்  மிகவும் நெருங்கிய நண்பனாக பழகி வந்துள்ளார்கள் அதேபோல் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் நல்ல நண்பர்களாக இருந்து வந்தார்கள்.

சிவகார்த்திகேயன் 2012ஆம் ஆண்டு தான் சினிமாவில் அறிமுகமானார் ஆனால் அதற்கு முன்பு இரண்டு வருடங்களுக்கு முன்பே சிம்புவை வைத்து நெல்சன் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார் ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக அந்த திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது அதன்பிறகு நெல்சன் அவர்களுக்கு படவாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை அதனால் சிவகார்த்திகேயன் மூலம் அனிருத் பழக்கம் நெல்சனுக்கு  கிடைத்தது.

அதன்பிறகு அனிருத் சிவகார்த்திகேயன் ஆகியோரின் சிபாரிசில் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக நெல்சன் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை ரசிகர்களுக்கு ஏற்றவாறு இயக்கியதால் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட் ஆவார் என பலரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் நடந்ததோ வேறு.

முதல் திரைப்படம் வெற்றி கொண்டாலும் அடுத்தடுத்து பட வாய்ப்பை கொடுப்பதற்கு பலரும் தயங்கினார்கள் தயாரிப்பாளர்களும் நெல்சன் இயக்கத்தில் படத்தை தயாரிக்க முன்வரவில்லை இந்த நிலையில் தன்னுடைய சொந்த தயாரிப்பில் நெல்சன் இரண்டாவது திரைப்படத்தை இயக்க சிவகார்த்திகேயன் வாய்ப்பு கொடுத்தார் அப்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் டாக்டர்.

ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதாவது கொரோனா காலகட்டத்தில் பலரும் ott இணையதளத்தில் படத்தை வெளியிட்டு சம்பாதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் படத்தை திரையரங்கில் தான் வெளியிடுவேன் என சிவகார்த்திகேயன் ஒற்றைக் காலில் நின்றார்  டாக்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் வெற்றி பெற்றது.

அதன்பிறகுதான் நெல்சன் ஊர் உலகத்திற்கு தெரிய ஆரம்பித்தார் இந்த நிலையில் தற்பொழுது விஜயை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார் ஆனால் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தநிலையில் நெல்சன் தற்பொழுது ரஜினியை வைத்து அடுத்த திரைப்படத்தை இயக்க இருக்கிறார் உச்ச நடிகர்களை வைத்து படங்களை இயக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் நெல்சன்.

நண்பன் சிவகார்த்திகேயன் தயவில் உயர்ந்துள்ள நெல்சன் தற்போது சிவகார்த்திகேயனுக்கு துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 8 வருடங்களாக சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் நட்பை துண்டித்து கொண்டார்கள்.

அதேபோல் தனுஷுடன் அனிருத் சண்டையிட்டு பிரிந்து விட்டார் இந்த நிலையில் அனிருத் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சுற்றி வருகிறார் அதேபோல் இதே குரூப்பில் தான் நெல்சன் இருந்தார். ஆனால் திடீரென தனுஷின் நெல்சன் சந்தித்துள்ளார் தனுஷை சந்தித்த நெல்சன் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்த புதிய திரைப்படத்திற்கான கதையையும் தனுஷிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது அதேபோல் தனுஷ் கதை பிடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினி நடிக்கும் புதிய திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தனுஷ் நடிப்பில் புதிய திரைப்படத்தை நெல்சன் தனுஷை  இயக்குவதற்காக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது தனுஷ் சந்தித்த நெல்சன் கதை சொன்ன தகவல் சிவகார்த்திகேயன் காதுக்கு சென்றுள்ளது இவ்வளவு நெருங்கி பழகி வந்த நண்பன் இப்படி முதுகில் குத்தலாமா என சிவகார்த்திகேயன் தனக்குள்ளே கேட்டுக் கொள்கிறார்.

ஏனென்றால் தனுஷை சந்திக்க சென்றது தப்பில்லை ஒரு வார்த்தை கூறி இருக்கலாமே அவ்வளவு நெருக்கமாக பழகி வந்தோமே தனுஷுக்கும் எனக்கும் பிரச்சனை இருப்பது நன்றாக அறிந்த வைத்திருக்கும் நெல்சன் தன்னை வளர்த்துவிட்ட நண்பன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை எப்படியோ போகட்டும் என தனுஷைப் போய் சந்தித்தது சினிமா பிரபலங்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி நெல்சன் சிவகார்த்திகேயன் முதுகில் மறைமுகமாக குத்தி உள்ளது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

Exit mobile version