பொழுதை கழிக்க குடும்பத்துடன் துபாய் சென்ற நெல்சன் – கூடவே வந்த பிரபல நடிகை.! வைரலாகும் புகைப்படம்.

இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார்.அந்த வகையில் முதலில் நயன்தாரா யோகிபாபுவை வைத்து கோலமாவு கோகிலா என்னும் டார்க் காமெடி படத்தை கொடுத்து அசத்தினார். அதன்பின் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர்.

என்னும் படத்தையும் கொடுத்தார் இந்த படமும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலில் 100 கோடியை அள்ளி புதிய சாதனை படைத்தது. அப்படியே விஜய்யை வைத்து அண்மையில்  பீஸ்ட் படத்தை எடுத்தார் அந்தப் படம் சுமாராக ஓடினாலும் வசூலில் பட்டையை கிளப்பியது என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவரது 169 வது திரைப்படத்தை எடுப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் நெல்சன். இந்தப்படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் ஆரம்பிக்கும் என சொல்லப்பட்டதால் அதற்கு முன்பாக தனது மனைவி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு துபாய் சென்றுள்ளார்.

அவர்களுடன் நெருங்கிய நண்பர்கள் சிலர் போயுள்ளனர் இந்த நிலையில் இவர்களுடன் சேர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து டாப் நடிகர்களுடன் நடித்து வரும் நடிகை பிரியங்கா அருள்மோகன் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இணைந்து மற்றொரு சினிமா பிரபலமான நடிகர் கவின் இணைந்திருந்தார்.

துபாயில் இவர்கள் அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நெல்சனின் மனைவி  சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதை நீங்களே பாருங்கள் அழகிய புகைப்படத்தை..

nelson
nelson

Leave a Comment