லோகேஷ் போலவே மிரட்டபோகும் நெல்சன்.! ஜெயிலர் படத்தின் கதை இதுதான்…

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் கதை குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிம்பு நடிப்பில் உருவாகி இருந்த வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருந்தார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஆனால் இந்த படம் ஒரு சில பிரச்சனைகளின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து நடிகை நயன்தாரா மற்றும் யோகி பாபுவை வைத்து கோலமாவு கோகிலா என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கி அறிமுகமானார் நெல்சன்.

இதை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற ஒரு மெகா ஹிட் படத்தை கொடுத்தார். தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் மூன்றாவதாக பெரிய ஹீரோவை கமிட் செய்தார். அந்த வகையில் தன்னுடைய மூன்றாவது படமான பீஸ்ட் திரைப்படம் நடிகர் விஜய் வைத்து இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது மட்டுமல்லாமல் நெல்சன் திலிப் குமார் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.

அதன் பிறகு தற்போது ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி அவர்கள் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது அதனை தொடர்ந்து படத்தின் ஷூட்டிங் தமிழ்நாடு மற்றும் நேபால் உள்ளிட்ட பல பகுதிகளில் விறுவிருப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த மற்றும் தர்பார் ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது இதனை தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தின் மீதான நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் கதை இதுதான் என்று ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது ஜெயிலர் திரைப்படம் முழுக்க முழுக்க இரவில் நடக்கும் பல சம்பவங்களை நெல்சன் தெளிவாக கச்சிதமாக காட்டி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் ஒரே இரவில் நடக்கக்கூடிய விஷயங்களை கதை கருவாக வைத்து உருவாக்கி இருந்தார் அதேபோல தற்போது ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் அதே போல உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இது லோகேஷ் பானியில் உருவாகாமல் நெல்சன் பாணியில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் கதை மிகவும் நன்றாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Comment