நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலில் நடிக்கும் ஹீரோ யார் தெரியுமா??

பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பல பிரபல நடிகர், நடிகைகள் சின்னத்திரைக்கு நடிக்க வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாகவே சின்னத்திரை தொடர்கள் சினிமா அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. ஒவ்வொரு சேனலும் தங்களது டிஆர்பி டேட்டிங்காக்க புதிய வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நீதானே என் பொன்வசந்தம் என்ற புது தொடர் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மராட்டிய மொழியில் புகழ்பெற்ற சீரியல் துலா பகத்ரே இந்த சீரியல் தான் தற்போது ஜீ தமிழில் நீதானே எந்தன் பொன்வசந்தம் என்ற பெயரில் ரீமேக் செய்து ஒளிபரப்ப செய்து வருகிறார்கள். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 20 வயதான இளம்பெண் அணுவுக்கும் 40 வயது கடந்த பணக்கார குடும்பத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் இருக்கும் இடையே நடக்கும் காதல் திருமணம் தான் இந்த சீரியலின் கதை.

இந்த தொடரில் நடிகை கதாபாத்திரத்தில் நடிக்குபவர் தர்ஷனா அசோகன். இவர் இந்த தொடரின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருக்கிறார்.

இந்த சீரியலில் சூரியபிரகாஷ் கேரக்டரில் பிரபல நடிகரான ஜெய் ஆகாஷ் நடிக்கிறார். வெள்ளித்திரையில் எவ்வளவு மாஸ் ஹீரோ, ஹீரோயினியாக இருந்தாலும் இவர்கள் கடைசியில் சின்னத்திரையில் நடிக்க தொடங்குவார்கள். அந்த வகையில் இந்த சீரியலில் ஹீரோவாக பிரபல நடிகர் ஜெய் ஆகாஷ் நடிக்கிறார்.

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஸ்ரீலங்காவில் தான். இவர் முதன் முதலாக1999ஆம் ஆண்டில் ரோஜாவனம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைதொடர்ந்து ரோஜாகூட்டம், ராமச்சந்திரா, இனிது இனிது, அட என்ன அழகு உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இவர் மிக பிரபலமான நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட இயக்குனரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய பல மொழி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது சின்னத்திரையில் களம் இறங்கியுள்ளார் இதுதான் இவருடைய முதல் சீரியல் தற்பொழுது இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Leave a Comment