நீலிமாவிடம் ஒரு இரவுக்கு எவ்வளவு என கேட்ட நபர்.! அவர் கொடுத்த தரமான செருப்படி பதில்.!

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை பிரபலமாக நடித்து வரும் நடிகை என்றால் நீலிமா ராணி, இவர் வெள்ளித்திரையில் கதாநாயகிகளுக்கு தோழியாகவும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் சின்னத்திரையில் காதலியாகவும், மனைவியாகவும், குழந்தைக்கு அம்மாவாகவும், வில்லியாகவும், நடித்து மிரட்டியுள்ளார். மேலும் சின்னத்திரையில் வில்லியாக பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் 1992 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகிய தேவர் மகன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல என பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் நீலிம ரணி 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அதில் நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு துணை நடிகைக்கான விருது கிடைத்தது. மேலும் இவர் 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.  இந்த நிலையில் நீலிமா ராணி தன்னுடைய இருபத்தோரு வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்.

neelima raani
neelima raani

திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்,  மேலும் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் அவர் கதாநாயகியாக நடிக்க முடியவில்லை,  சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நீலிமா ராணி அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நீலிமா ராணி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார்,  அதில் ஒரு ரசிகர் ஒரு நைட்டுக்கு எவ்வளவு என மோசமான கேள்வியை கேட்டுள்ளார் அதற்கு பதிலளித்த நீலிமா ராணி கொஞ்சம் நாகரீகத்தை எதிர்பார்க்கிறேன்,  மற்றவர்களைப் கேவலமாக பேசுவது வக்கிர புத்தியின் காரணம்தான் தயவுசெய்து சைக்காலஜி டாக்டரைப் பாருங்கள் என பதிலளித்துள்ளார்.

Leave a Comment