விக்ரமின் ஆக்ரோஷமான நடிப்பை பார்த்து மிரண்டு போன நெடிசங்கள்.! தெறிக்க விடும் ட்விட்டர் விமர்ச்சனம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மேலும் நடிகர் விக்ரம் அவர்களுக்கு தமிழ் ரசிகர்கள் மட்டும்மல்லாமல் வெளி மாநில ரசிகர்களும் ஏராளம் என்றே சொல்லலாம்.

இநிலையில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாக உள்ளதாக பட குழு அறிவித்த நிலையில். இன்று கோப்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விக்ரமின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதால் அவருடைய ரசிகர்கள் ஆராரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் கோப்ரா படத்தில் சீயான் விக்ரமின் அற்புதமான நடிப்பும் இயக்குனர் அஜய் முத்துவின் அழுத்தமான திரை கதையும் நெட்டிசங்கள் மத்தியில் அமோக வரற்கு பெற்று வருகிறது. மேலும் கோப்ரா திரைப்படத்தில் நடிகர் விக்ரம் அவர்கள் 9 வேடத்தில் நடித்து சினிமாவில் மீண்டும் ஒரு ரீ என்றி கொடுத்துள்ளார்.

அதே நேரத்தில் இயக்குனர் ராஜன் ஆனந்த் முத்துவின் அழுத்தமான திரைக்கதைக்காக விமர்சகர்களிடம் அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது. மேலும் திரைப்படம் திரில்லர் திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

கோபுர திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது இந்த திரைப்படத்தில் ஸ்ரீநிதி செட்டி, மிருனாளினி, மீனாட்சி, இர்பான் பதான், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் மேலும் இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் தன்னுடைய அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் கோபுரா படத்தின் நேர்மறை விமர்சனம் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் படத்தின் முதல் பாகம் ரஷ்யர்களை கவர்ந்திருந்தாலும் இடைவேளைக்குப் பிறகு ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது.

Leave a Comment

Exit mobile version