டெலிவரி ஆனவுடன் முதன்முறையாக குழந்தையை தூக்கிய நயன்தாரா.! இணையதளத்தில் வைரலாகும் பிஞ்சு குழந்தையின் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல சர்ச்சைகளை சந்தித்து வந்தார் பிறகு எல்லா சர்ச்சைகளையும் ஓரங்கட்டி விட்டு தான் உண்டு தான் நடிப்பு உண்டு என நடிப்பில் முழு கவனம் செலுத்த தொடங்கினார்.

அதன் பிறகு சிறிது காலம் கழித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது காதலிக்க ஆரம்பித்தார் இவர்கள் நீண்ட வருடம் காதலித்து வந்தார்கள் பிறகு இருவரும் இருவீட்டா சமாதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களின் திருமணத்தில் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டார்கள் மேலும் நயன்தாராவின் திருமண ஆல்பம் வெளியாகும் என பலரும் கூறி வந்த நிலையில் இதுவரை இன்னும் வெளியாகவில்லை. திருமணத்திற்கு பிறகு சில மாதங்களிலேயே இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை பிறந்தது இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது ஆனால் இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே சில வருடங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டார்களாம்.

இரண்டு ஆண் குழந்தைக்கும் பெயர் சூட்டி அதன் பெயரை சமூக வலைதளத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா வெளியிட்டார்கள். சமூக வலைத்தளத்தில் குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டு இருவரும் சந்தோஷமாக இருப்பதை வெளிப்படுத்தினார்கள்.

nayanthara

நயன்தாரா தற்பொழுது திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இந்த நிலையில் நயன்தாரா தற்பொழுது பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

nayanthara

இந்த திரைப்படத்தை அட்லி தான் இயக்கி வருகிறார். இந்த நிலையில் அன்னையர் தினத்தை பலரும் கொண்டாடி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் பலரும் புகைப்படங்களை வெளியிட்டு வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நயன்தாரா முதன்முறையாக தன்னுடைய குழந்தையை கையில் ஏந்திய பொழுது விக்னேஷ் சிவன் புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தற்பொழுது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

nayanthara

Leave a Comment

Exit mobile version