விமான நிலைய பணி பெண்ணுக்காக இறங்கி போன நயன்தாரா..! எதற்காக தெரியுமா..?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வருவதாக செய்தி வெளிவந்த நிலையில் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பொதுவாக நடிகை நயன்தாரா பல காதல் தோல்விகளை சந்தித்து உள்ளார் அந்த வகையில் சிம்பு பிரபுதேவா போன்ற பல்வேறு நடிகர்களுடனும் இவர் காதலில் ஈடுபட்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர்களுக்கு பிறகுதான் விக்னேஷ் சிவன்.

மேலும் நெற்றிக்கண் திரைப்பட பிரமோஷன் அப்பொழுதே நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில் ஆனால் அது பற்றிய விரிவான ரகசியத்தை யாரும் கூறவில்லை. ஆனால் தற்சமயம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் சமீபத்தில் நேற்றி கடன் செய்ய சென்ற நயன்தாராவின் தலையில் குங்குமம் இருந்தது இதை பார்த்து பலரும் நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதா என புது குழப்பம் உருவாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் நேற்றிகடன் செய்ய திருச்சியில் உள்ள தங்கள் குலதெய்வ கோயிலுக்கு விக்னேஷ் மற்றும் நயன்தாரா சென்றுள்ளார்கள்.

அப்பொழுது ஏர் போர்ட்டில் உள்ள பணிப்பெண் ஒருவர் புகைப்படம் எடுப்பதற்கு தயங்கி நின்றார்.  உடனே அந்தப் பெண்ணைப் பார்த்த விக்னேஷ் சிவன் அவரை கைகாட்டி அவர் உயரம் குறைவாக இருப்பதன் காரணமாக செல்பி எடுக்க தயங்குகிறார் என்று கூறிய உடன் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அவர் உயரத்திற்கு குனிந்து நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்கள்.

இவ்வாறு வெளிவந்த செய்தி சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

nayan-1
nayan-1

Leave a Comment