விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்பு வேறு ஒரு நடிகருடன் லிவிங் டுகெதரில் இருந்த நயன்தாரா – முக்கிய பிரபலம் பேச்சு.!

தென்னிந்திய சினிமா உலகில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு அதிகமாக இருந்தாலும் நயன்தாராவின் நம்பர் இடத்தை பிடிக்க முடியாமல் தவிக்கின்றனர் அதற்கு காரணம் நயன்தாரா ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் டாப் ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்கிறார். அந்த வகையில் அஜித், விஜய், ரஜினி, சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என சொல்லிக் கொண்டே போகலாம்.

மேலும் நடிகை நயன்தாரா சோலோ படங்களிலும் தொடர்ந்து நடித்து ஓடுவதால் அவரது மார்க்கெட் கீழே இறங்காமல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோல்ட், கனெக்ட் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா ஜவான், நயன்தாரா 75 போன்ற படங்களிலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். சினிமா உலகில் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் இவர் நிஜ வாழ்க்கையில் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகி சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் பல சர்ச்சைகளில் நயன்தாரா சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் நயன்தாரா குறித்து சில திடுகிடும் தகவல்களை சொல்லி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்பு..

நடிகர் ஆர்யாவுடன் லிவிங் டுகெதரில் இருந்தார் அவர்கள் இருவரும் மலையாள மொழியை சேர்ந்தவர்கள் என்பதால் நெருங்கி பழகினர். அப்பொழுது நயன்தாரா ஆர்யாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தார் என கூறியுள்ளார். இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த விஷயத்தை ரசிகர்களும் அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

Leave a Comment