இயக்குனர்கள் தலையில் கல்லை தூக்கிபோட்ட நயன்தாரா.! இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் அலப்பறை கொஞ்சம் ஓவராக தான் போயிட்டு இருக்கு இது தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாக கூறப்படுகின்றனர்.

திருமணம் முடிந்த மூன்று மாதங்களுக்கு மேல் கடந்த நிலையில் நயன்தாரா அவர்கள் இன்னமும் ஹனிமூன் கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இவரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா இயக்குனர்களிடம் புது புது கண்டிஷன் போடுவதாக கூறப்படுகிறது இதனால் இயக்குனர்கள் பலர் பயங்கர அப்சட்டில் இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் அவர் முடித்துக் கொடுக்க வேண்டிய பல திரைப்படங்களை இழுத்தடித்துக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படம் விரைவில் முடிக்க வேண்டும் என்று கேட்டால் என்னால் இப்போது நடிக்க முடியாது ஷூட்டிங் பங்கேற்க முடியாது உங்களுக்கு அவசரம் என்றால் வேற ஒரு நடிகையை வைத்து படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று திமிராக கூறியதாகவும் கூறப்படுகிறது.

நடிகை நயன்தாரா சமீபத்தில் அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளாராம் ஆனால் இப்பொழுது அந்த படத்தின் இயக்குனர் படத்தை விரைவில் எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளதாகவோ கூறப்படுகிறது ஆனால் நடிகை நயன்தாரா இந்தப் படத்தை அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாக சொல்லப்பட்டது.

தற்போது அந்த படத்தின் இயக்குனர் தலையில் ஒரு இடியை இறக்கியது போல இருக்கிறராம் நயன்தாராவின் 75 ஆவது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்திற்காக நடிகை நயன்தாராவுக்கு 10 கோடி வரை சம்பளம் வாங்க உள்ளதாக பேசப்பட்டு வந்தது.

இதனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தை எப்போது தயாரிப்பது என்று குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. என்னதான் கண்டிஷன் போட்டு இருந்தாலும் நயன்தாரா தயாரிப்பாளரை பற்றி கொஞ்சமாவது யோசிக்கலாம் இருக்கிறாரே என்று பலரும் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

Leave a Comment