நெற்றிக்கண் திரைப்பட வில்லனுக்கு சிபாரிசு செய்த நயன்தாரா.!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் அஜ்மல். இவர் மிஸ்கின் இயக்கத்தில் உருவான அஞ்சாதே திரைப்படத்தில் நடித்து முதல் முதலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அஜ்மல் தனது நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

அதன் பிறகு தமிழில் திரு திரு துரு துரு, கோ, இரவுக்கு ஆயிரம் கண்கள், சித்திரம் பேசுதடி 2, நெற்றிக்கண் போன்ற பல திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் மனதில் ஒரு மிகபெரிய இடம் பிடித்தார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது பிசாசு2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இவருக்கு கோ திரைப்படத்தின் பிறகு எந்த ஒரு திரைப்படமும் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதன் பிறகு மார்கெட் இழந்த இவருக்கு ஒரு சில திரைப்படத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.

ajmal
ajmal

இவர் கடைசியாக நடித்த நெற்றிக்கண் திரைப்படத்தில் ஒரு கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்த திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது. இந்த படத்தில் நயன்தாரா அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.

தற்போது மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அஜ்மல் நடிக்க உள்ளனர்.  இந்த நிலையில் நயன்தாரா அடுத்ததாக நடிக்கும் மலையாளத் திரைப்படத்தில் அஜ்மலுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பரிந்துரை செய்துள்ளனர். நெற்றிக்கண் படத்தில் அவர் நடிப்பு மிகவும் பிடித்ததால் இதை செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Comment