பந்தாவாக தனி விமானத்தில் பறந்து வந்த நயன்தாரா.!எல்லாம் கொரோனா பண்ற வேலை தான்.

தமிழ் திரையுலகில் பல நடிகைகள் ரசிகர்களிடையே பிரபலம் ஆகி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்து வருகிறார்கள் ஒரு சில நடிகைகள் வந்த வேகத்திலேயே திரும்பி போய் விடுகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தனது முகத்தை தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பதிய வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தற்பொழுது நயன்தாரா விருவிருப்பாக பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிக் கொண்டார்.

நயன்தாரா நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் நெற்றிக்கண் இந்த திரைப் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது மேலும் நயன்தாரா ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

அண்ணாத்த திரைப்படம் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதற்காக நயன்தாரா ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார் விமானத்திலிருந்து நடந்து போகும் போது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் போல் கெத்தாக விமானத்திலிருந்து வலம் வரும் நயன்தாரா என பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment