அடுத்த படத்திற்கான ஹீரோவை ஓகே செய்த “நயன்தாரா”.? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக ஓடிக் கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் அஜித், விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற பல நடிகர்களுடன் நடித்துள்ளார் நடித்தும் வருகிறார்.

இப்போது கூட நயன்தாரா  கைவசம் நயன்தாரா 75, ஜவான் போன்ற படங்கள் இருக்கின்றன.  படங்களில் நடிப்பதை பெரிதாக வைத்திருந்தாலும் அதையும் தாண்டி அவ்வபொழுது   நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். அண்மையில் பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி சிட்டியில் விருது விழா  ஒன்று நடைபெற்றது இதில் நயன்தாரா, பிரதீப் ரங்கநாதன்,  Sakshi Agarwal, கவின், மணிரத்தினம், ஏ ஆர் ரகுமான்..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வெள்ளை கலர் புடவையில் செம அழகாக வந்து அசத்தினார். அவரது அதில் இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் அமர்ந்திருந்தார்.  அதன் புகைப்படம் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த பலரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜவான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் தான் நடிக்க போகிறார் அவருக்கு ஜோடியாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளிவந்தன ஆனால் இது குறித்து உறுதியாக பேசப்படாத நிலையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் பக்கத்தில் நயன்தாரா இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனால் இருவரும் இணைவது உறுதி என் கூறி புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி விடுகின்றனர். இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.  இதோ நடிகரும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன்  மற்றும் லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

nayanthara
nayanthara
nayanthara
nayanthara

Leave a Comment