6 கோடி சம்பளமும் கொடுத்துவிட்டு உங்கள் பின்னாடியே நாய்போல் சுத்தணுமா.? நயன்தாரா மீது செம கடுப்பில் தயாரிப்பாளர்கள்.! ஆனால் விக்னேஷ் சிவன் விட மாட்டார் போல

Nayanthara promotion issue :  சினிமாவில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் புகழின் உச்சத்தைத் தொடுவதற்கு பல அவமானங்களையும் கஷ்டங்களையும் பட்டு தான் ஒரு லெவலுக்கு வருவார்கள், அந்த வகையில் அஜீத் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, ஏனென்றால் அஜித் ஆரம்ப காலத்தில் தமிழ் கூட பேசத் தெரியாமல் பல அவமானங்களை சந்தித்துள்ளார்.

அதேபோல் பல தோல்வி திரைப்படங்களையும் கொடுத்துள்ளார், இருந்தாலும் அஜித் தன்னுடைய விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் இன்று உச்ச நடிகராக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார். அந்தவகையில் இன்று பல நடிகர் மற்றும் நடிகைகள் ஓரளவு புகழை பெற்று விட்டாலே அஜித் ரேஞ்சுக்கு தங்களை நினைத்துக்கொண்டு ஓவர் பில்டப் கொடுக்கிறார்கள்.

அப்படி ஓவர் பில்டப் கொடுத்து மொக்கை வாங்கிய பல நடிகர் மற்றும் நடிகைகளை நாம் பார்த்துள்ளோம், அந்த வகையில் தற்பொழுது நயன்தாராவின் உண்மை முகம் தெரிய வந்துள்ளது. அஜித் பொதுவாக எந்த ஒரு பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா நடிக்க வந்த புதிதில் அனைத்து பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும கலந்து கொண்டார் ஆனால் தன்னுடைய வளர்ச்சி அதிகமானதும் படிப்படியாக புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நிறுத்திக் கொண்டார், அதனால் பல தயாரிப்பாளர்கள் இயக்குனர் சங்கத்திலும் நடிகர் சங்கத்திலும் முறையிட்டு வந்தார்கள்.

இதைப்பற்றி நயன்தாராவிடம் கேட்டபொழுது நயன்தாரா சொன்ன காரணம்தான் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது ஏனென்றால் நான் கலந்து கொள்ளும் புரமோஷன் படங்கள் அனைத்துமே தோல்வியை சந்திக்கிறது அதனால் தயாரிப்பாளர்களின் நலனுக்காக தான் நான் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என கூறியுள்ளார்.

ஆனால் நயன்தாரா இதற்கு முன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பல திரைப்படங்கள் வெற்றி அடைந்துள்ளன, அதேபோல் சொந்த தயாரிப்பு மற்றும் நெருங்கிய நண்பர்களின் படம் ஆகியவற்றிற்கு தன்னுடைய புரமோஷனை வாரி வழங்கி வருகிறார், இதை பார்த்த பல தயாரிப்பாளர்கள் உங்களுக்கு 6 கோடி சம்பளமும் கொடுத்து விட்டு பின்னாடியே நாய் போல் சுற்ற வேண்டுமா உங்களின் புரமோஷனுக்காக என கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர்கள் இனி உங்க சொந்த தயாரிப்பிலேயே நடித்துக் கொள்ளுங்கள் எனக்கூறி நயன்தாராவின் பல திரைப்படங்களை கைவிட்டு விட்டார்களாம், இந்த நேரத்தில்தான் விக்னேஷ் சிவன் உள்ளே புகுந்துள்ளார், நயன்தாராவின் மார்க்கெட் குறைந்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணி விக்னேஷ் சிவன் தயாரிப்பாளர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புரமோஷன் நிகழ்ச்சிக்கு நான் இனி வருகிறேன் நான் வந்தால் நயன்தாராவும் வருவார் என கூறியுள்ளார்.

உடனே தயாரிப்பாளர்கள் அடுத்த திரைப்படத்திற்கு கூட்டி வாருங்கள் அதன்பிறகு சம்பளத்தை பற்றி பேசிக் கொள்ளலாம் என ஒரே போடாக போட்டுள்ளார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment