ஷாருக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகவில்லை..? திரைப்படம் பற்றி வெளியான சுவாரசியமான தகவல்..!

சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் அட்லீ இவர் தமிழில் தளபதி விஜயை வைத்து பல்வேறு திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டவர் அந்த வகையில் எப்படியாவது ஷாருக்கானை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி விட வேண்டுமென காத்துக்கொண்டிருந்தார்.

அந்தவகையில் இவருடைய வெகு நாள் பசிக்கு தீனி போட்டது போல ஷாருக்கானை வைத்த திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் அவரை வைத்து லயன் என்ற ஒரு திரைப்படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் இயக்கி வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இந்த திரைப்படத்தில்  படப்பிடிப்பு தாமதம் ஏற்பட்டதன் காரணமாக நயன்தாரா இந்த திரைப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.

இவை முழுக்க முழுக்க பொய்யான தகவல் என சமீபத்தில் தெரியவந்துள்ளது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருக்கும் கதாபாத்திரத்தில் இருந்து ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளன.

அதாவது இந்த திரைப்படத்தில் ஷாருக்கான்  இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார் அதாவது தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரம் ஆகும் அந்த வகையில் நடிகை நயன்தாரா விசாரணை அதிகாரியாக என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

sharukhan
sharukhan

இவ்வாறு விசாரணையின்போது  ஷாருக்கானுடன் காதல் ஏற்பட்டு காதலியாக மாறுகிறார். இவ்வாறு வெளிவந்த சுவாரசியமான தகவலை ரசிகர்கள் கொண்டாடுவது மட்டும் இல்லாமல் இதனை வைரலாக்கி வருகிறார்கள்.

Leave a Comment