பணத்தை சம்பாதிக்க சுற்றும் நயன்தாரா – பேராசை எங்கே போய் முடியுமோ..

லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை ஆரம்ப காலகட்டங்களில் இருந்து இப்போதுவரையிலும் தக்க வைத்துக் கொண்டு உச்ச நட்சத்திரங்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு நடிப்பதால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை வைத்திருக்கிறார் மேலும் டாப் ஹீரோக்களுடன் நடிப்பதால் சம்பளத்தையும் மற்ற நடிகைகளை விட அதிகமாக வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

நடிகை நயன்தாரா 6 கோடியை சம்பளமாக வாங்குவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பொழுது கூட தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சினிமாவில் நடிப்பது மூலமாகவே அவர் பல கோடி சம்பாதித்து இருக்கிறார்.

இது போதாகுறைக்கு தனது காதலனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் இணைந்து நடத்தி வருகிறார். இதனால் நயன்தாரா காட்டில் பண மழை அடித்துக் கொண்டுதான் இருக்கிறது இது இப்படி இருக்க மறுபக்கம் அவர் சாய்வாலா, அழகுசாதனப் பொருள்கள் மற்றும் பல்வேறு சின்னச் சின்ன வியாபாரங்களில் கூட முதலீடு செய்துள்ளாராம்.

இது இப்படி இருக்க லேட்டஸ்ட்டாக வந்த தகவல்படி துபாயில் கூட தன்னுடைய கேரள நண்பர்கள் மூலம் நிறைய தொழில்களில் பணம் செலுத்தி வருவதாக கூறுகின்றனர் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறாராம் நயன்தாரா அவருக்கு ஹாலிவுட் நடிகையைப் போல அதிகம்.

சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டதாக பலரும் கூறி வருகின்றனர் அந்த காரணத்தினால் தான் இருக்கின்ற பணம் பத்தாததால் அதையும் தாண்டி இன்னும் அதிகம் சம்பாதிக்க பல்வேறு தொழில்களில் அவர் பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version