சட்டத்தை மீறி குழந்தை பெற்றுக்கொண்ட நயன்தாரா, விக்னேஷ் சிவன்.! நடந்தது என்ன.?

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிகளைப் பற்றி தற்பொழுது சர்ச்சைக்குரிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தற்பொழுது நடிகை நயன்தாராவிற்கு குழந்தை பிறந்துள்ளது குறித்து தகவல்கள் சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் கோலாகலமாக நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டார்கள் திருமணமாகி கர்ப்பமாக இருக்கிற தகவல் கூட வெளி வராத நிலையில் தற்போது திடீரென்று இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்திருக்கிறது இதனால் இவர்கள் எப்படி பெற்றோர்கள் ஆனார்கள் என்ற கேள்வியை பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது.

அதன் பிறகு இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதே தெரிய வந்தது எனவே தற்போது இது ஒரு ட்ரெண்டிங்காகவே இருந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூட வாடகாத்தாயின் மூலம் ஆண் குழந்தை பெற்ற அப்பாவானார். மேலும் நடிகை ரேவதி கூட திருமணம் செய்து கொள்ளாமல் இவ்வாறு வாடகத்தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்.

இவ்வாறு செய்து வரும் நிலையில் நடிகை நயன்தாராவின் சொந்த விருப்பம் இதனைப் பற்றி ஏன் விவாதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளனர் அதாவது திருமணம் செய்த தம்பதியினர்கள் 5 ஆண்டுகள் குழந்தை இல்லை என்றால் மட்டுமே சட்டப்படி வாடகத்தாய் மூலம் குழந்தை பெற முடியும் என சுகாதாரத்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சட்டத்தை மீறியே வாடகை மூலம் குழந்தை பெற்றுள்ளார்கள் எனவே தற்பொழுது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் மீது இவ்வாறு சர்ச்சை எழுந்துள்ள நிலையில் விரைவில் இது குறித்து இவர்கள் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment