செருப்புக் காலுடன் திருப்பதி சன்னதியில் வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.! சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்..

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் முடிந்தது. இவருடைய அழகிய புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாக ரசிகர்கள் தொடர்ந்து லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளி குவித்து வருகின்றனர்.

கோலிவுட்டில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தில் பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது. பல கோடி செலவில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமண உடைகள் எப்படிப்பட்டது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இவ்வாறு திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதிக்கு சென்றுவுள்ளார்கள். அங்கு திருப்பதியின் திருமாடவீதியில் பக்தர்கள் யாரும் செருப்பு காலுடன் செல்ல மாட்டார்கள் ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் போட்டோ ஷூட் நடத்துவதற்காக செருப்பு அணிந்து சென்றதாக தற்பொழுது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

nayanthara-viknesh-shivan-9
nayanthara-viknesh-shivan-9

அங்குள்ளவர்களை நயன்தாரா மற்றும் விக்னேஷ் இவனுக்கு எதிராக கண்டனங்கள் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.  இதுவரையிலும் எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் போட்டோ ஷூட் மற்றும் படப்பிடிப்பு போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒரு போட்டோகிராபர்களுடன் சென்று போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் நடத்தியதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

nayanthara-viknesh-shivan-8
nayanthara-viknesh-shivan-8

இவ்வாறு நயன்தாரா விக்னேஷ் சிவனை தொடர்ந்து கேமராமேனும் காலணி அணிந்துள்ளார்.  இவ்வாறு இவர்கள் எடுத்துக் கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை சோசியல் மீடியாவை வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Comment