நயன்தாராவும் அவருடைய அம்மாவும் இப்படிப்பட்டவர்கள் தான் பரபரப்பாக பேட்டி கொடுத்த விக்னேஷ் சிவன் தாயார்…!

நடிகை நயன்தாராவின் மாமியார் தற்பொழுது நயன்தாரா பற்றிய சில விஷயங்களை பகிர்ந்துள்ள நிலையில் அது குறித்து தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா மலையாள திரைப்படத்தில் நடித்து பிறகு கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த படத்திற்குப் பிறகு ஏராளமான விமர்சனங்களுக்கு உள்ளான நயன்தாரா பிறகு தன்னுடைய கடின உழைப்பினால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார். இந்நிலையில் 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 75 படங்களுக்கு மேலாக நடித்து தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவருடன் நடிப்பில் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது.

அதன் பிறகு கனெக்ட், கோல்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் கணக்கு திரைப்படத்தினை அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகளாக காதலித்து கடந்த ஜூன் மாதம் கரம் பிடித்தார் திருமணத்திற்கு பிறகு இரட்டை குழந்தைகளையும் வாடகை தாயின் மூலம் பெற்றுக் கொண்டார்கள் இதனால் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில் தற்பொழுது பட வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை நயன்தாரா தற்பொழுது ஹிந்தியில் அட்லீ இயக்கம் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் இவரை தொடர்ந்து விக்னேஷ் சிவனும் சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார் இப்படிப்பட்ட உள்ள நிலையில் தன்னுடைய மருமகள் நயன்தாராவை பற்றி விக்னேஷ் சிவனின் அம்மா கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது நயன்தாரா வீட்டில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் தனக்கு 4 லட்சம் கடன் இருப்பதாக கூற உடனே நயன்தாரா 4லட்சத்தை கொடுத்து உங்களுடைய கடனை அடைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் மேலும் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் அனைவரும் நயன்தாரா சொன்னால் தான் காபி கூட குடிப்பார்கள் என்று பேசினார்.

அப்பொழுது நயன்தாராவின் அம்மாவும் உதவி செய்வதில் மிக சிறந்தவர் அவர் ஒருமுறை தனது வீட்டில் வேலை செய்பவர்கள் கஷ்டப்படுவதை பார்த்து தங்க வளையல்களை கழட்டி கொடுத்தார் என்று தன்னுடைய தன்னுடைய சம்மந்தி மற்றும் மருமகளை பற்றி அவர் கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version