மறைந்த நடிகர் விவேக் குறித்து நயன்தாரா வெளியிட்ட உருக்கமான பதிவு.! பலரும் அழவைக்கும் செய்தி.

நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மாரடைப்பால் மரணம் அடைந்த விவேக்கின் உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. ரசிகர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள்  அனைவரும் பார்த்து தனது இறுதி அஞ்சலியை நேரில் செலுத்தினர்.

வர முடியாத நடிகர்-நடிகைகள் பலரும் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் விவேக்கின் புகைப்படத்தை வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையான நயன்தாரா விவேக் உடனான நினைவுகளை பகிர்ந்துள்ளார். நயன்தாரா மற்றும் விவேக் இருவரும் இணைந்து விசுவாசம் என்ற திரைப்படத்தில் சிறப்பாக பணியாற்றினர்கள்.

அவருடன் பணியாற்றும் போது மற்றவர்களை எப்பொழுதும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார் குறிப்பாக விசுவாசம் படத்தில் அவருடன் பணியாற்றிய தனது வாழ்நாளில் மறக்க முடியாது என குறிப்பிட்டார். மேலும் அவர் சீக்கிரம் சென்று விட்டார் அது என்னால் நம்ப முடியவில்லை.

ஆனால் மனித வாழ்க்கை கணிக்க முடியாத ஒன்று என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.இவரது இழப்பைத் தாங்கும் சக்தியை அவரது குடும்பத்திற்கு இறைவன் தரவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Leave a Comment