பழசை மறக்காத நயன்தாரா.. புதிய தொழில் துவக்க விழாவிற்கு யாரை அழைத்துள்ளார் பாருங்கள்

Nayanthara : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் புக்காகி நடித்து வருகிறார். மறுபக்கம் பிசினஸிலும் தலைகாட்டி வருகிறார். முதலில் டீக்கடை ஒன்றை ஆரம்பித்தார் அதில் நல்ல லாபம் வர பல்வேறு நிறுவனங்கள் மீது முதலீடு செய்தார்.

அதோடு நிறுத்திக் கொள்ளாமல் விக்னேஷ் சிவனுடன் இணைந்து  சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.  இப்படிப்பட்ட நயன்தாரா திடீரென தானாகவே சொந்தமாகவே நிறுவனங்களையும் நடத்த ஆரம்பித்துள்ளார். டீ கடை, ரியல் எஸ்டேட், கால் டாக்ஸி என பல தொழில்களை நடத்தி வந்த இவர் திடீரென 9 ஸ்கின் நிறுவனத்தை ஆரம்பித்து நாடு முழுவதும் பிரபலம் ஆகி உள்ளார்.

வெகு விரைவிலையே மக்கள் மத்தியில் 9 ஸ்கின் பொருள்கள் சென்றடைய இருக்கின்றன இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் நயன்தாரா பழசை மறக்காமல் தன் தமிழில் தான் நடித்த முதல் ஹீரோவை  9 ஸ்கின் நிறுவனத்தின் திறப்பு அழைத்து உள்ளார். அவர் வேறு யாருமில்ல சரத்குமார் தான்.

நயன்தாரா தமிழில்  சரத்குமாரின் ஐயா படத்தில் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தின்  வெற்றிக்கு பிறகு தான் ரஜினி உடன் சந்திரமுகி, அஜித்துடன் பில்லா, விஜய் உடன் வில்லு என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். அதன் பிறகு தான்.

இவருடைய வளர்ச்சியை மிகப்பெரிய அளவில் இருந்தது அதனால் சரத் குமாரை தன்னுடைய 9 ஸ்கின் நிறுவனத்தை ஓபன்னிக்கு அழைத்து உள்ளார். அப்போது சரத்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் நயன்தாரா ஆகியவர்கள் பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

Actress Nayanthara
Actress Nayanthara