முதல் முறையாக இரட்டைக் குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்தாரா..! லைக்குகளை அள்ளி வீசும் ரசிகர்கள்

Nayanthara : மலையாள நடிகையான நயன்தாரா தமிழில் “ஐயா” படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகளும் குவிந்தது. அந்த வகையில் ரஜினியுடன் சந்திரமுகி, அஜித்துடன் வில்லு, தனுஷ் உடன் யாரடி நீ மோகினி, விஜய் உடன் பிகில் என நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார்.

ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வளர்ந்தார். இதனால் தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக நயன்தாரா மாறினார். இப்படி சினிமாவில் ஓடிக்கொண்டிருந்த நயன்தாரா பல்வேறு நடிகர்களுடன் உடன் காதலில் விழுந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறி அவருடைய கேரியருக்கு ஆபத்தாக  மாறியது இதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்டு நயன்தாரா..

படங்களின் மட்டும் கவனம் செலுத்தி நடித்த வந்தார். அப்படி நானும் ரவுடி தான் திரைப்படத்தின் போது விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது பிறகு ஏழு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவருக்கும் தற்போது இரு ஆண் குழந்தைகள் இருக்கிறது சினிமா, குடும்ப வாழ்க்கை என இரண்டிலும் சந்தோசமாக வாழ்ந்து வரும் நயன்தாரா “ஜவான்” திரைப்படத்தில் நடித்துயுள்ளார் வெகு விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்போ டிரைலர் இன்று வெளியாகி வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது இரு குழந்தைகளின் முகத்தையும் காண்பித்துள்ளார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் நயன்தாரா மேடம் உங்களை போலவே இரண்டு குழந்தைகளும் செம்ம அழகாக கொழுக் மொழுக்கென்று இருக்கிறார்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை நீங்களே பாருங்கள்.

Actress Nayanthara
Actress Nayanthara