ஐயா திரைப்படத்தில் நயன்தாராவுக்கு முன்பு நான் தான் நடிக்க வேண்டியது.! உண்மையை உடைத்த பிரபல நடிகை.

ayya movie : 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் “ஐயா” இந்த திரைப்படத்தில் சரத்குமார், ஐயா துறை, செல்லதுரை என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதேபோல் நயன்தாரா செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் நெப்போலியன், பிரகாஷ்ராஜ், ரோகிணி, வடிவேல், ராஜ்கபூர், மதன்பாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தார்கள்.

ஐயா திரைப்படத்தில் நயன்தாராவுக்கு முன்பு நான் தான் நடிக்க வேண்டியது என பிரபல நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார். ஐயா திரைப்படத்திற்கு முதன் முதலில் பிரபல நடிகை தான் தேர்வு செய்துள்ளார்கள். அதனை பிரபல இணையதள நேர்காணலில் நடிகை நவ்யா நாயர் கூறியுள்ளார்.. இயக்குனர் ஹரி எழுதி ஐயா திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தை, கே பாலச்சந்திரனின் கவிதாலயா ப்ரோடக்ஷன்ஸ் கீழ் புஷ்பா கந்தசாமி தயாரித்திருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் வேட்டை நடத்தியது அதேபோல் ஐயா திரைப்படத்தின் மூலம் தான் நயன்தாரா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம்’ என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது.

இந்த நிலையில் நவ்யா நாயர் ஐயா திரைப்படத்திற்கு முதன் முதலில் நான் தான் தேர்வானேன் ஆனால் அதன் பிறகு நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறினார். ஏனென்றால் ஐயா திரைப்படத்தில் நடிப்பதற்கு நவ்யா நாயரை அணுகியுள்ளார்கள் ஆனால் அந்த திரைப்படத்தை நவ்யா நாயர் நிராகரித்துள்ளார் அதற்கு காரணம் பெரிதாக அவர் கூறவில்லை ஆனால் மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வந்ததால் இந்த திரைப்படத்தின் நிராகரித்தார் எனக் கூறியுள்ளார்.

அதன் பிறகு நயன்தாராவை தேர்வு செய்தார்கள் இந்த தகவலை தெரிந்து கொண்ட ரசிகர்கள் ஐயா படம் இல்லை என்றால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவே இப்பொழுது இருந்திருக்க மாட்டார் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

navya nair
navya nair