எழுதி வச்சுக்கோங்க விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கன்ஃபார்ம்..! அடித்துச் சொல்லும் இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வரும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கோலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமில்லாமல் பாலிவுட் திரைப்படங்களில் சமீபத்தில் ஒப்பந்தமாகி 2,3 திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு நிற்க கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சமீபத்தில் இவருடைய மவுசு தமிழ் சினிமாவில் ஏகிரி விட்டது இதற்கு முக்கிய காரணம் இவர் விக்ரம் திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம் தான் காரணம்.

இந்நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படம் தான் மாமனிதன் இந்த திரைப்படம் விமர்சனரீதியாக பெருமளவு பாராட்டுகள் கிடைத்த நிலையில் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் அனைவரும் கண்டு ரசித்து பார்க்கும்படி அமைந்திருக்கும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் மிகவும் சிறப்பாக குடும்ப திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்று கூறியுள்ளார்கள் மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த திரைப்படத்தில் வேற லெவலில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் பற்றிய கதை சில இணையத்தில் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் விஜய் சேதுபதி அவர்கள் இந்த திரைப்படத்தில் இரண்டு குழந்தைக்கு தந்தையாக இருப்பது மட்டுமில்லாமல் இதில் ஆட்டோ ஓட்டுனர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.  அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பை பார்த்த இந்த திரைப்படத்தின் இயக்குனர் கண்டிப்பாக உங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று கூறியுள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இயக்குனர் சங்கர் அவர்கள் மாமனிதன் திரைப்படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியது மட்டுமில்லாமல் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை பார்க்கும் அளவிற்கு தூண்டுதலை ஏற்படுத்திவிட்டார்.

Leave a Comment

Exit mobile version