மக்கள் மத்தியில் வில்லனாக மிரட்டிய நாசரின் 5 திரைப்படங்கள்.! ஓவ்வொன்றும் வேற லெவல்..

தமிழ் சினிமாவில் நடிகர் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு பரீட்சமானவர் தான் நடிகர் நாசர். இவர் திரைக்கதை, வசனம், பாடலாசிரியர், பாடகர்,நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கி வருகிறார்.மேலும் ஆரம்ப கட்டத்தில் நாசர் அவர்கள் வில்லனாக நடித்து மிரட்டிய ஐந்து திரைப்படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

குருதிப்புனல்:- நடிகர் கமல்ஹாசன் கதையில் நாசர் இணைந்து நடித்த படம் தான் குருதிப்புனல். இந்த படத்தில் அர்ஜுன் மற்றும் கமல் ஆகிய இருவரும் காவல்துறை அதிகாரிகளாக  நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் நாசர் அவர்கள் பயங்கரவாத அமைப்பின் தலைவராக நடித்துள்ளார்.

வால்டர் வெற்றிவேல்:- பி வாசு இயக்கத்தில் சத்யராஜ் சுகன்யா ரஞ்சிதா நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வால்டர் வெற்றிவேல். இந்த திரைப்படத்தில் நாசர் அவர்கள் காவல்துறை அதிகாரியாக இருந்தபோது சத்யராஜ் அவர்கள் அவரை காவல் துறையில் இருந்து நீக்கப்பட்டார். அவரை பழிவாங்கும் எண்ணத்தில் அரசியலில் புகுந்து அவரை எப்படி பழி வாங்குகிறார் என்பது இந்த படத்தின் கதை.

மகளிர் மட்டும்:- கமல்ஹாசனின் கதை மற்றும் தயாரிப்பில் உருவான மகளிர் மட்டும் என்ற திரைப்படத்தில் ரேவதி ஊர்வசி ரோகினி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நாசர் அவர்கள் பணிபுரியும் பெண்கள் மீது ஆசை படுகிறார். ஆனால் இந்த மூன்று பெண்களும் நாசருக்கு சரியான பதிலடி கொடுக்கிறார்கள் இதுவே இந்த படத்தின் கதையாகும்.

தேவர் மகன் :- இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு என அனைத்தும் கமலஹாசன் தான். மேலும் இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கமல் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில்  நாசர் அவர்கள் மாயாண்டி தேவர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார்.

தவசி:- விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் தான் தவசி. நாசர் அவர்கள் சங்கர பாண்டி இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால். மேலும் இந்த படத்தில் நடித்த விஜயகாந்தின் பெயருக்கு கலங்கும் விளைவிக்க பல சூழ்ச்சிகளை  நாசர் அவர்கள் செய்திருப்பார்.

Leave a Comment