“நாய் சேகர் ரிட்டன்ஸ்” படம் ஓடாது… முன்பே கணித்த பிரபல காமெடி நடிகர்.! சோகத்தின் பிடியில் வடிவேலு

90 கால கட்டங்களிலிருந்து இப்போது வரையும் பல்வேறு படங்களில் காமெடியன்னாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் இதுவரை ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் மேலும் சினிமா உலகில் ஹீரோவாகவும் நடித்து வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.

அந்த வகையில் 23ஆம் புலிகேசி, தெனாலி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இன்னொரு ஹிட் படத்தை கொடுக்க.. வடிவேலு 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் போது ஷங்கருக்கும், வடிவேலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட பின் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை இனிய படங்களில் நடிக்க கூடாது என நிபந்தனை விதித்தது.

இதனால் கடந்த நான்கு வருடங்கள் சினிமா பக்கம் நடிக்காமல் இருந்தார்.  ஒரு வழியாக பிரச்சனை எல்லாம் முடித்து தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார். முதலில் நாய் சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன் ஆகிய படங்கள் ஒப்பந்தமானார். முதலாவதாக நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் அண்மையில் வெளிவந்தது படம் எதிர்பார்த்த அளவிற்க்கு சிறப்பாக இல்லை மேலும் படத்தில் காமெடி அந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகாததால் வசூலில் மண்ணை கவ்வியது.

இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல காமெடி நடிகர் சிங்கமுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலு மற்றும் நாய் சேகர் ரிட்டன்ஸ் குறித்து பேசி இருக்கிறார். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை நான் பார்க்கவில்லை ஆனால் நாய் சேகர் படத்தை பார்த்தவர்களின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை அந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது.

இந்த படம் வெளிவந்தால் இங்கு இருக்கும் காமெடியன்கள் எல்லாம் அழிந்து போவார்கள் என வடிவேலு கூறினார் நான் போன மாதமே சொன்னேன். இந்த படம் ஓடாது என்று சொன்னேன். வடிவேலு தன்னுடன் நடித்த சக காமெடி நடிகர்களை எல்லாம் மாற்றிவிட்டார் பத்து பேர் சேர்ந்து ஒரு தேரை இழுக்க வேண்டும் தனியாளாக இழுத்தால் எங்கேயாவது சுளுக்கு பிடித்து விடும் என பேட்டியில் கூறினார்.

Leave a Comment